தொடருபவர்கள் - நன்றிகள்

Friday, December 11, 2009

சர்வாதிகார சீனாவும் இந்தியாவும்



2012 படத்தை போல உலகம் அழியுமோ இல்லையோ(அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஒரு படம் ). அதைப்பற்றி பிறகு பேசுவோமே .ஆனால் 2012 இல் சீனா இந்தியா யுத்தம் நடக்குமோ தெரியவில்லை. தற்போது உலக வல்லரசு ஆதிக்க போட்டி சீன இந்திய அமெரிக்க ஆகிய நாடுகளிடையே உருவாக்கம் பெற்றுள்ளது. பிருத்தானியா பல நாடுகளை ஒன்றிணைத்து இருந்தாலும் அவை எல்லா விடயத்திலும் இணைந்து செயட்படுவதுமில்லை. உலக வல்லரசு அமெரிக்காவிடம் ஆயுத பலம் இருந்த போதிலும் மனிதவளம் சீனா போல அல்ல . அமெரிக்காவும் நீண்ட கால நோக்குடனேயே இந்தியாவுடன் உடன்படிக்கைகளை பேணி வருகிறது . அமெரிக்க சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க மறைமுக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது .

தற்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை பிரச்சனை முறுகல் நிலையை எட்டியுள்ளது. இந்தியாவும் சீனாவும் இணைந்தால் ஆசியாவிலேயே மிகப்பெரிய சக்தியாக ஆகிவிடும் வேறு ஒருவரும் மூக்கை நுழைக்க கூட முடியாது என மேற்குலகுக்கு நன்றாக தெரியும். சீனா தனது அண்டிய நாடுகளான பாகிஸ்தான் ,நேபாளம் ,பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவையே பேணி வருகிறது . இலங்கையிலும் இடம் பெற்ற யுத்தத்தின் போது கூடுதலான உதவிகளை சீனா செய்தது அனைவரும் அறிந்ததே. இந்தியாவை சுற்றி உள்ள அனைத்து நாடுகளுடனும் சீன சிறந்த உறவை பேணி வருகிறது.

தற்போது சீனா மெல்ல மேலல்ல தனது எல்லை பிரதேசங்களை விரிவாக்கி வருகிறது .. இதற்க்கு இந்தியாவிடம் இருந்து மௌனமே பதிலாக அமைகிறது. சமீபகாலமாக சீனாவின் ஆதிக்கம் எதுவும் தமது நிலப்பரப்புக்குள் இல்லையென வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் அதற்க்கு ஆமோதித்து உள்ளார்.
ஆம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாரிய யுத்தம் ஒன்று நடந்தது அனைவரும் அறிந்ததே . இதில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து இந்திய இன்னும் மீளவில்லை போல இருக்கிறது .



அண்மையில் கூட இந்திய சீன எல்லையில் இந்திய நெடுஞ்சாலைகளை அமைக்க அதற்க்கு சீனா கடும் எதிர்ப்பு தெருவித்ததை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது . இவ்வளத்துக்கும் இந்தியா நெடுஞ்சாலைகள் அமைத்தது தனது எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில். அதே போல சீனா தனது நெடுஞ்சாலைகளை அமைத்த போது இந்தியா மௌனம் மட்டுமே காத்தது. சிறு எதிர்ப்பு கூட தெருவிக்கவில்லை . சீனாவுடனான வெளியுறவுக்கொள்கைகளில் ஏற்பட்ட விரிசலே இதற்க்கு காரணம். இந்தியா சீனா இடையில் நீளமான எலைப்பகுது காணப்படுவது குறிப்பிட தக்கது . இன்னமும் சீனா இந்தியாவில் பல இடங்களில் தனது கால்களை அத்து மீறி பதித்து உள்ளது .

1 comments:

jagadeesh said...

இந்தியாவை வெல்ல எவராலும் இயலாது. ராவணனையே வந்து கொன்றவர்கள் நாங்கள். முதலில் பார்க்க சாதாரணமாகத் தான் இருக்கும், இறுதியில் ஜெயம் எங்களுக்குத் தான்.

ஏன் ?