
எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டினம் எண்டது உண்மை. ஆனால் இதே போல யோசனை தோன்றியவர்களும் இருப்பார்கள். அவர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
என்ன செய்யுறது எல்லாம் ஓய்ந்து இருக்கிற நிலையிலை (என்ட மனதில தான்). மீண்டும் மீண்டும் துன்பத்தையும் துயரத்தையும் கிளறுவது போல அமைந்து விட்டது அவதார் திரைப்படம். திரைப்படத்தை கேவலமாக சொல்லவில்லை. திரைப்படம் மிக மிக அருமை. நமக்கு உலகம் போற்றும் காதல் காவியத்தை முன்னர் கொடுத்தவர் அல்லவா.
இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் நம் மனதில் ஒரு இடத்தில் குடி கொள்கிறார். அது பற்றி பிறகு சொல்கிறேன். சரி இனி தலைப்புக்கு வருவம். அவதார் நமக்கு ஒரு அவதாரம் புதியதொரு விடிவு காலம் வராதா என ஏங்கி தவிக்கும் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த கதை நாங்களும் நேர பாத்திருக்கிறம் எண்டு யாரும் சொல்ல கூடாது. என் கண்களை கலங்க வைத்த காட்சிகள் எத்தனை பேரை கலங்க வைத்திருக்குமோ? எத்தனை பேர் என்னை போல யோசித்து இருப்பார்களோ எண்டு மனம் ஏங்குகிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே சந்தோஷமாகவும் கூடிய வளங்கள் நிறைந்த நாடாகவும் ( உலகம்) வித்தியாசமான அறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்ட உலகமாக அமைதியாக ஒரு உயிருக்கும் தீங்கு செய்யாத உயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் விதமாக வந்து குதிக்கிறது மனித இனம். அவர்களின் வளர்ச்சி கண்டு வளங்களை சுரண்ட வரும் மனிதர்கள் கடைசியில் அவர்களையே அழிக்கின்றனர் . என்ன வித்தியாசம் இங்க ஒரு இனம் முற்றாக அழிந்து விட்டது ஒருவரின் உதவியும் இன்றி அவடரில்(அது படமாக இருந்தாலும்) அந்த நவிகள் என்று அழைக்கப்படும் உயிரினம் அழிய கூடாது எண்டு கவலைப்படுபவன் ஈழ தமிழனாக தான் இருக்க வேண்டும். என்ன நமக்கு நடந்தது அவற்றிற்கு படத்தில் கூட நடந்து விட கூடாது எனும் ஒரு ஆதங்கம் தான்.
என்ன எங்களை காக்க கதாநாயகன் வரவில்லை என்பது தான் கவலை.
அந்த அழகான வளம் கொழிக்கும் இடத்தை மனிதன் அழிக்கும் போது எங்கட தேசமும் அதன் அழிவும் தான் கண் முன்னே வந்து நிக்குறது கண்ணீர் துளிகளாய். வேறு என்ன செய்ய முடியும் . அனைவரும் எதிர்க்கும் போது உதவி செய்ய கொஞ்ச பேர். அதுவும் அவர்கள்(நவிக்கள் ) அப்பாவிகள் போல இருப்பதும் அவர்களை கொல்ல மனிதன் துடிப்பதும் மனிதனின் நடவடிக்கை எங்களையே முகம் சுளிக்க வைக்கிறது . ஒரு வேளை மனிதன் வர முதல் எங்கட உலகம் இப்பிடி தான் இருந்திருக்குமோ எண்டும் யோசிக்க வைக்குது . அழிவில் நவிக்கள் அழுவது துடிப்பது எம் கண் முன்னே எம் மக்களை கொண்டு வந்து நிறுத்துகிறது . இறுதியில் கதாநாயகன் மனிதர்களுடன் கதைப்போம் என்று கூறி முயற்ச்சி செய்கிறான் அதையும் ஏற்க்க முடியாமால் தமது அழித்தல் நடவடிக்கையை தொடங்குகிறது படை.
நம் அனைவருக்கும் பெரு மூச்சு கதாநாயகன் எடுத்த நடவடிக்கை."This is our land" என்று தளபதி (நவிகளின்) கத்தியது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. எனக்கே எழும்பி கத்தோணும் போல இருந்தது .( உடனே அள்ளிக்கொண்டு போயிருப்பங்கள் ).. நவிக்கள் படை எடுத்து வரும் போது காட்சிகளில் பின்னி விட்டார். எதோ உண்மையாக உரிமைக்காக போராடுபவர்கள் படை எடுத்தது போல இருந்தது .
எமது மக்களின் அழிவை கண் முன்னே காட்டிய படம் இறுதியில் நமக்கு மகிழ்ச்சியான முடிவு தான் படத்துல. நிஜத்துல ????
நமது பக்கம் இருந்து நவிகளுக்காக ஜெயித்து காட்டும் இடத்திலேயே நமது ஜாம்பவான் ஜெமேஸ் கமரூன் நம் மனதில் இடத்தை பிடிக்கிறார்..


