
இளையராஜாவுக்கு பத்ம பூஷண விருது கிடைத்த சந்தோசம் . இண்டைக்கு எனது ரசனைகள் கற்பனைகள் உங்களுடன் என்பதற்க்கு ஏற்ப்ப ஒரு பதிவு. உங்களுக்கும் பிடித்திருக்கும் . வாசித்த பின்னர் மீண்டும் பாடல்களை கேட்டு பாருங்கள்.நீங்கள் வரலாறு எல்லாம் நல்லா படித்திருப்பீங்க . அது விக்கிபீடியலையும் இருக்கு . அதை விட வித்தியாசமாக ரசனைகளை பகிரலாம் என நினைக்கிறேன்.
இன்று வரை இளைஜர்கள் ரசிக்கிறார்கள் என்றால் அது சும்மாவா. காதுக்கு இரைச்சல் இல்லாத இசை.
இளையராஜா தமிழ் இசைக்கு கிடைத்த ஒரு ராஜா என்டுசொல்லலாம். தமிழ் இசை வரலாற்றை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம் . பாவநாசம் சிவன் ராமநாதன் யுகம் , கே.பி மகாதேவன் , விசுவநாதன் ராமமூர்த்தி சகாப்தம் , இளையராஜா சகாப்தம் , எ ஆர் ரகுமான் சகாப்த்தம் என பிரிக்க்கலாம் . இன்று வரை அதுவே . இதில் இளையராஜா , எ ஆர் ரகுமான் மட்டுமே தமது முதல் படங்களிலேயே பிரசித்தி பெற்றோர். இருவரும் தமிழ் இசையில் புதிய புதிய யுத்திகளை கையாண்டனர்.
பண்ணைபுரம் எனும் ஊரிலே ஞானதேசிகனாக பிறந்தவர். சின்ன வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டவர். லண்டனில் இசையில் பட்ட படிப்பை முடித்து . கிளாசிகல் கிட்டாரில் சிறந்து விளங்கினார். அவரது முதல் படம் அன்னக்கிளி . மச்சான பாதீங்களா போன்ற பாட்டுகள் முதல் படத்திலேயே உச்சிக்கு கொண்டு சென்றது.
வித்தியாசமான இசை முறைமை அதாவது கிராமிய இசையும் மேலைத்தேய இசையும் கலந்து ஒரு மிக்சிங் ஆக கொடுத்திருந்தார் . இது கூடுதலான மக்களை சென்று அடைந்தது. வந்த கொஞ்ச காலத்திலேயே ஒரு தமிழ் இசை புரட்ச்சி என்றும் சொல்லலாம். நவீன பின்னணி இசையில் கொள்ளை கொண்டவர் .
கிராமிய பாடலான குத்தச்சம்பா பாட்டில் கூடுதலாக கிராமிய பின்னணி பாடல் ஆகையால் கிராமச் சூழலில் பெண்கள் நெல் குத்தும் சத்தம் போன்றவற்றை தனது இசையில் புகுத்தி புதுமையான இசையை வழங்கினார். இயற்க்கை சத்தங்களையும் இசையில் புகுத்தினர்.
முக்கியமாக தமிழ் கச்சேரிகளில் முன்னர் ஹிந்தி பாடல்கள் பாடப்பட்டு வந்தது . கூடுதலாக முன்னர் விச்வநாதன் ஆகியோர் குறைவாகவே கிராமிய இசைகளை பயன்படுத்தி இருந்தனர். இளையராஜா அந்த குறையை போக்கியிருந்தார். ஹிந்தி பாடல்கள் திடீரென மேடைகளில் பாடுவது நிறுத்தப்பட்டது . இந்த பெருமைக்கு உரியவர் இளையராஜா தான்.

கூடுதலாக மாறுபட்ட பின்னணி இசை. ஷநேயில் ப ப ப பா என்று வரும் பின்னணி இசைகளை வயலினை பாவித்து கி கி கி கீ என மாற்றி புதிய பாணியை உருவாக்கினர். கூடுதலாக மௌன ராகம் படத்தில் கார்த்திக் ஓடும் கட்ச்சியில் இதை பயன் படுத்தி இருப்பார் .
முதல் சோகமாகவே வயலின் இசைகள் அமைந்திருக்கும் அதை விறு விறுப்புக்காக பாவித்தார். கூடுதலா காமெடி படங்கள்ல பின்னணில ஷெனை பாவித்திருப்பார் .
செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு அந்த ஆண்டில் பிடித்த பாடலாக செந்தூர பூவை குறிப்பிட்டு இருந்தார்
கோரஸ் களிலும் சிறந்து விளங்கினார் என்பதற்க்கு "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி" பாட்டை கேட்டால் உங்களுக்கே புரியும் .அதாவது பல குழல்கள் சேர்ந்து ஒரு ஆற்காச்ற்ற போன்று அமையும். அற்புதம் .ஆண் பெண் கோரசகளிலும் கலக்கியிருப்பார். படத்துடன் பார்த்தால் இன்னும் அருமை
கூடுதலாக பெண் பின்னணியில் பாடும் ஆரிராரோ சொல்வதற்க்கு வார்த்தை இல்லை . கேட்டு பாருங்கள் .
கோரல் இசை என்று சொல்லுவாங்க கூடுதலா நாங்க ஆங்கில இசைகள்ள இதை கவனிக்கலாம் . அதை தமிழ் பாணிக்குள் புகுத்தி தொடர்ந்து கிராமிய இசை வரும் படி அமைத்திருப்பார்.கேட்பதற்க்கு இனிமை..
தேவர் மகன் படத்தில் "போற்றிப்பாடடி பொன்னே " பாட்டின் ஆரம்பம் அவ்வாறே அமைந்திருக்கும்.

அதே தேவர் மகன் படத்திலை இஞ்சி இடுப்பழகா பாட்டு எங்கயோ கொண்டு போய் விட்டது.
ஒரு டூயட் பாட்டை மிகவும் அருமையாக அதன் தன்மை கெடாது துள்ளல் பாடுகளுக்கு போடும் இசையை போட்டிருந்தார். பெண் குரலை மிக அருமையாக பாவித்திருப்பார் .புல்லாங்குழல் இசை இடையில் வரும் அருமை . தேவையான இடங்களில் சிறு சிறு இசை .அருமையான ஒருங்கிணைப்பு.
கிராமிய ரசிகர் முதல் பட்டண மக்கள் வரை அனைவரையும் ஒருங்கு இணைத்து அனைவரையும் தமது கட்டுக்குள் வைத்திருந்தது சிறப்பு. பாடல் வரிகள் கிராமிய இசையாக இருக்கும் அனால் பின்னணி இசையோ மேலைத்தேய இசையில் அமைந்திருக்கும் . சிறந்த கற்பனையுடன் வழங்கியிருப்பார் .
கர்நாடக இசையை பாமரர்களுக்கும் கொண்டு செல்லும் உக்த்தியில் இளையராஜா ஜெயித்து விட்டார்.
இன்னும் நிறைய தகவல்கள் உங்களோட பகிர இருக்கிறேன் வரும் பதிவுகளில் பார்க்கலாம். உங்களுக்கும் தகவல்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment