தொடருபவர்கள் - நன்றிகள்

Thursday, January 28, 2010

இளையராஜா -உலக இசையின் ராஜா (பாகம் 2)

அவருடைய பாடல்களில் இனிமை ஆனால் அவரின் கற்பனையையும் நுணுக்கங்களையும் கவனிக்க மறுக்கிறோம். உங்களோடு தொடர்ந்து பகிர்கிறேன் .
இளையராஜாவின் மீதான பார்வையின் தொடர்ச்சியாக இந்த பதிவை இடுகிறேன். எனது ரசனைகளின் தொடர்ச்சியும் தொகுத்தவற்றையும் தருகிறேன். இளையராஜா பற்றிய பதிவுகளையும் ரசனைகளையும் நீட்டிக்கொண்டு செல்லலாம்.

வெளிநாடுகளில் பிறந்திருந்தால் எங்கேயோ போயிருக்க வேண்டியவர். கிராமத்தில் பிறந்ததாலோ என்னவோ அவர் இப்படி . சரி அதெல்லாம் விடுவம். நான் நீங்கள் இளையராஜாவிடம் ரசித்தவை பற்றி பார்ப்போம்.



மேலை நாட்டு இசையையும் கர்நாடக சங்கீதத்தையும் கலந்து கொடுத்து நவீன இசையை உருவாக்கியவர் இளையராஜா .அதில் அவருடைய சிஷ்யன் ஏ ஆர் ரகுமானும் தேர்ச்சி பெற்றவர் என்பது உங்களுக்கே தெரியும்.

இளையராஜா இசையமைத்த "பொட்டு வைத்த மல்லிகை மொட்டு பூத்திருக்கு வெக்கத்தை விட்டு " பாடலை கேட்டீர்கள் என்றால் அது கிராமிய மெட்டு , கிராமிய பாடலும் கூட , தமிழ் மணம் வீசும் அந்த பாடலை ஒரு மேலைத்தேய முறையில் அதாவது ஒரு மேலைத்தேய இசையில் கொடுத்தால் எப்படி இருக்கும். அதை தான் செய்திருப்பார் இளையராஜா. பாடலின் ஆரம்ப இசையை கேட்டு பாருங்க. இசைக்கருவிகளை ஒரு ஒழுங்காக இசைத்திருப்பார். ஆரம்ப புல்லாங்குழல் இசை எங்கேயோ இட்டுச்செல்லும் .

அதே நேரம் கர்நாடக இசையிலும் ராகங்களிலும் இளையராஜா சளைத்தவராக இருக்கவில்லை. அலைகள் ஓய்வதில்லை பட பாடல்களில் இதை கவனிக்கலாம்.
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உறவில் கலந்த உயிரே " பாடலை யாரும் மறந்திருக்க முடியாது . "உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் " முடிந்தவுடன் அந்த பெண் குரலை அழகாக பயன்படுத்தி இருப்பார் .எஸ் எஸ் ஷஷி ரேகாவின் குரல் பின்நீட்டாங்க இல்லையா .



பின்னணியும் மிருதங்க இசை அமைதியாக செல்லும். அதனுடன் மேலைத்தேய கருவி ஒன்றையும் இலேசாக பாவித்திருப்பார்(பின்னணியில்) .

சுத்தமான கர்நாடக கீர்த்தனைகளுக்கும் இளையராஜா அற்புதமாக இசை கொடுத்திருந்தார் . அவருக்கு கூடுதலாக பிடித்த ராகம் மாயாமாளவகௌளை என்று குறிப்பிடலாம். கூடுதலான பாடல்கள் அந்த ராகத்திலேயே அமைத்திருப்பார்.
கூடுதலாக அவர் தனது மேடை நிகழ்ச்சிகளில் தனது முதல் பாடலாக ஜனனி ஜனனி பாடலை பாடுவார். அதில் ஒரு உயிரோட்டம் உண்டு என்று அடிக்கடி சொல்லுவார். அதை கேட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்.



கூடுதலாக இளையராஜாவின் உத்தி பாடகர்களை அருமையாக பாவித்திருப்பார். சில பாடல்களில் ஆண் பெண் குரல்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கேட்ப்பதட்க்கு அருமையாகவும் இருக்கும். ஆண் குரலில் ஏற்றம் இருக்கும் போது பெண்குரலில் ஒரு இறக்கம் இருக்கும் . உதாரணமாக "மதுரை மரிக்கொழுந்து வாசம் " பாட்டை கூறலாம் .

மற்றயது அனைவருக்கும் தெரிந்த கூடுதலாக கேட்க்கும் பாடல் " பூங்கதவே தாள் திறவாய் " ஐயும் குறிப்பிடலாம் . ஆண் குரல் மேல்ஸ்தாயியில் சென்று வரும் அருமை . பெண் குரலில் பாடல் மாறி வரும் போது பின்னிசை ஆண் குரலில் வழங்கப்படுவது சிறப்பு . மதுரை மரிக்கொழுந்து பாட்டை கேட்டால் இசை முடிந்தவுடன் "மெட்டுன்ன மெட்டு கட்டி" பெண் குரலில் தொடங்க மீண்டும் உயரும். இசை குறைந்து உயரும்.

குரல்களை மேலும் பயன்படுத்துபவராக புதியவர்களை அறிமுகப்படுத்தினார். பாலசுப்ரமணியத்தை அறிமுகப்படுத்தினார். ஜானகி கூட இளையராஜாவுக்கு பின்னரே பிரசித்தி பெற்றார்.

சின்ன சின்ன சின்னக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா . அற்புதமான கற்பனை. ஆரம்பத்தில் எளிய ஹம்மி அருமையாக அமைத்திருப்பார் . கர்நாடக பாணியிலான பாட்டு ஆனால் அது தெரியாமல் மேலைத்தேய இசையை பயன்படுத்தி இருப்பார் .

புதிய புதிய உக்திகளை தமிழ் இசைக்கு கொண்டு வந்த இளையராஜா. அதை ரசிக்கும் படியாக அமைப்பதிலும் தவறவில்லை. கூடுதலாக இளையராஜா ஆரம்ப இசையிலேயே கொள்ளை கொள்வது வழக்கம். அது தான் நானும் கூடுதலாக ஆரம்ப இசையும் கவனிப்பதுண்டு.



இந்த பாடலில் கிரட்சிசிசம் எனப்படும் இசை பயன்படுத்தி இருப்பார். லலிதா ராகம் அருமையான ராகம். "இதழில் கதை எழுதும் நேரம் இது... இன்பங்கள் அழைக்குது ". எனும் பாடல். பியானோ வயலின் ஒரு ஒழுங்கமைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆரம்ப இசை ஒரு பெண் நடப்பதற்கு ஏற்ப்ப இசை அமைத்தது போல...

எடுக்க எடுக்க குறையாதது இளையராஜா இசை ஜானம். அவரிடம் சரக்கு இல்லை என்பதெல்லாம் ஏற்க்க முடியாதது. கர்நாடக ராகங்களுக்கு எல்லை இல்லை. எப்படி வேண்டுமானாலும் தனது கற்பனையால் இளையராஜா மாற்றுவார்.

எனது பதிவும் இளையராஜா பற்றி எழுத எழுத குறையாது.. நம்மட இளையராஜா ராப் இசையிலும் சளைத்தவர் அல்ல .
யோசிக்காதீங்க அடுத்த பதிவில் மேலும் இடுகிறேன்.

3 comments:

தமிழ் உதயம் said...

இசைஞானி ஒருவர் போதும், நம் வெறுமையை விரட்ட. இசைஞானியின் ஹிட்டாகாத பல பாடல்கள், மிக மிக அற்புதமானதாக இருக்கும். தேடி பார்த்து கேட்டு மகிழுங்கள்

எப்பூடி ... said...

நீங்களும் ராஜா ரசிகரா? நன்றி. உங்களது பதிவு அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள்.

Anonymous said...

thanks raaja raaja thaan