
வேட்டைக்காரன் படத்தை சன் பிக்சர்ஸ் ஏகபோக உரிமை எடுத்து வெளிட்டது அனைவரும் அறிந்ததே. வேட்டைக்காரன் படம் வெளியாக முன்னரே பல விளம்பரங்களும் ஒரு மணியித்தியாலத்துக்கு 8 தடவை படி தனது அனைத்து தொலைக்காட்ச்சிகளுமான சன் மியூசிக், கே டிவி ,சன் டிவி யில் வழமை போல விளம்பரப்படுத்தியது . கூடுதலானவர்களுக்கு டிரெயிலர் பார்க்கும் போதே படத்தின் கதை விளங்கி விட்டது. அது இன்னொரு பக்கம் இருக்கட்டும். இது போதாது எண்டு சன் டிவி யில் வரும் அனைத்து நிகழ்ச்சியிலும் கட்டாயமாக வேட்டைக்காரன் பற்றிய கதையை புகுத்துவதும் பார்க்காதவர்களை எல்லாம் படம் நன்றாக இருக்கிறது என்ற சொல்ல வைக்கும் கொடுமையும் நடக்கிறது .
வேட்டைக்காரன் படம் வெளியாகி 18 மணித்தியாலங்களுக்குள் படம் மாபெரும் வெற்றி என அறிவித்ததும் சன் பிச்சர்ஸ் இன் இன்னொரு வெற்றி . இதை நம்பி மக்கள் அலை மோதியதும் அனைவரும் அறிந்ததே. சன் டிவி இந்தியாவின் அனைத்து பட்டி தொட்டியெங்கும் ஒளிபரப்பாவது அனைவரும் அறிந்ததே. போலி விளம்பரத்துக்கு மக்கள் ஏமாந்தனர்.
சரி பரவாயில்லை அவர்கள் நிறுவனம் விளம்பரப்படுத்துகிரர்கள் என சகித்துக்கொண்டு இருக்க முகம் சுளிக்கும் விதமாக மக்களை சென்றடையும் உண்மையை எடுத்துக்கூறவேண்டிய மக்கள் ஊடகங்கள் மக்களை பிழையாக வழிநடத்துவது பிழையானதல்லவா?


விஜய் ரசிகர்களும் இதை மறுக்க மாட்டார்கள் ஏற்று கொள்வார்கள் என நினைக்கிறேன்.
வரலாற்றில் மறக்க முடியாத கொடுமையாகவும் தனது மதிப்பையும் இழக்கும் விதமாகவும் சன் டிவி நடந்து கொண்டது நகைப்பை விட சலிப்பையும் கவலையையுமே ஏற்படுத்தியது. வேறொன்றும் இல்லை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் சன் செய்திகள் தான்.
சன் செய்திகளில் படம் வெளியாகி அடுத்த நாள் தலைப்பு செய்தியில் வேட்டைக்காரன் மாபெரும் வெற்றி என சன் டிவி கூறியிருந்தது மக்களை ஏமாற்றும் வேலையாகவே அமைந்திருந்தது.
அதுவும் தினகரனும் இதற்க்கு உடந்தையாக அதனது தளத்திலும் மற்றும் பத்திரிகையிலும் செய்திகளை வெளியிட்டதும் சங்கடத்திட்க்கு உள்ளாக்கியது.
சரி இதெல்லாம் ஒரு மாதிரி தற்போது குறைந்து வர நானும் சன் டிவி போட்டு வழமைய போல நிகழ்ச்சி பார்த்தேன். என்ன கொடுமை என்று தான் சொல்ல வேண்டும் டீலா நோ டீலா நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே. அந்த நிகழ்ச்சி தடோது அனைவரிடமும் பிரசித்தி பெற்றுள்ளது . அந்த நிகழ்ச்சி விளம்பரத்தில்" மக்களுக்கு ஒரு செய்தியாக உங்களுக்கும் பணம் வெல்லும் வாய்ப்பு உண்டெனவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் வேட்டைக்காரன் திரைப்படத்தை போய் பாருங்கள் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையளியுங்கள் எனவும் கூறப்பட்டது.
எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது என நம்ம வடிவேல் சொல்வது தான் யாபகம் வந்தது. வேறு என்ன செய்ய முடியும் .கட்டாயமாக திரையரங்கு போய் வேட்டைக்காரன் பார்க்க சொல்கின்றணர அல்ல கெஞ்சுகின்றனரா??

கொஞ்ச நாளைக்கு முதல் தான் வேட்டைக்காரன் பாடல்களை சன் மியூசிக் ஒளிபரப்பியது. கவலை வேண்டாம் மீண்டும் சுறாவை சன் பிக்சர்ஸ் தான் எடுத்துள்ளது.
இந்த கொடுமையை தட்டி கேக்க மக்கள் தான் வர வேண்டும் . கொஞ்சம் தரமான படங்களான கண்டேன் காதலை போன்ற படங்களுக்கு சன் டிவி விளம்பரம் கொடுப்பது சகிக்க கூடியது .இதுக்குமா ??
விளம்பரங்களை வைத்து படங்களை ஓட்ட முடியும் என்றால் நல்ல தரமான திரைப்படங்களை என்ன செய்வது. ஏன் நல்ல திரைப்படங்களை சன் பிச்செர்ஸ் எடுப்பதில்லை. நல்ல திரைப்படம் எடுப்பவர்கள் விளம்பரங்கள் தேவையில்லை என்று வருவதில்லையோ தெரியவில்லை. சுறா கோடிகளுக்கு வாங்கப்பட்டு உள்ளதாம். அப்பிடி எண்டா இன்னும் விளம்பரங்கள் இருக்கு. ஒரு பதிவில் வாசித்திருந்தேன் சுறா ஆஸ்கார் விருது வென்றது என்று..ஏன் வெளியாகி இரு நாளில் வெற்றி பெறும் போது வெளியாகாமல் ஆஸ்கார் விருது பெறுவது ஒன்றும் புதிது இல்லையே . எல்லாம் பொங்கல் வரைக்கும் தான்.
3 comments:
படம் ரிலீசாகி ஒரு மணித்தியாலத்திலேயே "படம்(?) மாபெரும் வெற்றி " எனப் போட்டதாக கேள்வி???!!!!
படம் ரிலீசாகி ஒரு மணித்தியாலத்திலேயே "படம்(?) மாபெரும் வெற்றி " எனப் போட்டதாக கேள்வி???!!!!
கொஞ்சம் பாவம் எண்டு தான் தள்ளி போட்டன் நேரத்தை ..
பத்திரிகையும் அடிச்சு முடிஞ்சாம்
1 மணித்தியாலத்திலை ..!!!!!
Post a Comment