தொடருபவர்கள் - நன்றிகள்

Saturday, December 25, 2010

கிறிஸ்மஸ் ஏன் டிசெம்பர் 25 ?

ஏன் எதற்கு என்ற கேள்வி சாதாரண விடயங்களிலேயே கேட்க்கப்பாதவிடத்து மத விடயங்களில் மட்டும் கேட்கப்பட்டு விடுமா என்ன ?

இந்த ஆக்கம் யார் மனதையும் புண் படுத்த அல்ல . திரிபுகள்   உணரப்பட வேண்டும் என்பதற்க்காகவே .மதம் என்ற பெயரால் அந்த கால  அரசியல் வாதிகள் கொடிய அடக்குமுறைக்கு செய்த திரிபுகள் . வாசிக்க விருப்பமற்றவர்கள் தவிர்த்துக்கொள்ளலாம் .

சூரியன வழிபாடு தான் எகிப்திய காலத்தில் இருந்தும் புராதன காலத்தில் இருந்தும் தொடருகிறது. 3000 வருடங்களுக்கு முன் ஹோரஸ்  எனும் சூரிய கடவுளை எகிப்தியர்கள் வழிபட்டனர் . காரணம் எளிது . சூரியன் தான் அனைத்தையும் தருகிறது . கண்ணாலும் காண முடிகிறது .

மனிதனின் கவனத்தை ஈர்த்த இன்னொன்று நட்சத்திரங்கள் . மனித வரலாற்றில் 12 இராசிகளுக்கும் உருவமும் கொடுத்திருந்தான் . அது பன்னிரண்டு மாதங்களையும் , நான்கு காலங்களையும் குறித்தது .

12 ராசிகளும் சூரியன் பிரயாணிக்கும். 3000 வருடங்களுக்கு முற்பட்ட எகிப்திய சூரிய கடவுள் ஹோரஸ் க்கு எதிரான கடவுள் செட் அதாவது இரவு  .

காலையில்  ஹோரஸ்  (சூரிய கடவுள் ) செட் ஐ கொல்வார். மாலையில் செட் ஹோரஸ்  ஐ கொள்வார் .இது புராதன ஐதீகம் . ஆனால் இருள் ,வெளிச்சம் விளையாட்டு ,கட்டுக்கதை தற்போது பரிணாமம் அடைந்து சாத்தான் என்றெல்லாம் மாறி விட்டது .

இனி விடையத்திற்கு வருகிறேன் .


ஹோரஸ்    :- பிறந்தது டிசெம்பர் 25 
                       கன்னி பெண்ணுக்கு  பிறந்தார்
                        12 பேருடன் பயணித்தார் 
                        கிழக்கில் நட்சத்திரம் 
                        3 ராஜாக்கள் பார்த்தார்கள்  
                         பல சாகசங்கள் செய்தார் 
                                                                              வெளிச்சத்தின் கடவுள் 
                                                                             3 நாட்கள் இறந்திருந்தார் 
                                                                                 உயிர்த்தெழுந்தார் 

ஆனால் இது அப்படியே தொடர்கிறது .......


 அட்டிஸ்(கிரேக்கம் ) (கி .மு 1200 ) டயநோசிஸ் (கிரேக்கம் 500 கி மு) ,மித்ரா பெர்சிய (கி .மு 1200 ) முக்கியமாக ஞாயிற்று கிழமை வழிபாட்டின் ஆரம்பம் . இந்த வரிசை மிக நீளமானது .


இயேசு கிறிஸ்து : -                               பிறந்தது டிசெம்பர் 25 
                                                                கன்னி பெண்ணுக்கு  பிறந்தார்
                                                                   12 பேருடன் பயணித்தார் 
                                                                 கிழக்கில் நட்சத்திரம் 
                                                                 3 ராஜாக்கள் பார்த்தார்கள்  
                                                                  பல சாகசங்கள் செய்தார் 
                                                                   வெளிச்சத்தின் கடவுள் 
                                                                   3 நாட்கள் இறந்திருந்தார் 
                                                                  உயிர்த்தெழுந்தார் 

டிசெம்பர் 25 ? கிழக்கில் நட்ச்சத்திரம் ? 3 ராஜாக்கள் ?

கிழக்கில் இருக்கும் நட்சத்திரம் சிரியஸ் . பிரகாசமான நட்சத்திரம் . டிசெம்பர் 24 ஆம் திகதி சிரியஸ் நட்சத்திரத்துடன் வரிசையாக மூன்று நட்சத்திரங்கள் இருக்கும் . அது தான் இப்போது அழைக்கப்படும் அந்த மூன்று ராஜாக்கள் .


சிரியஸ் ,அந்த மூன்று நட்சத்திரங்களும் டிசெம்பர் 25 ஆம் திகதி சூரியனை நோக்கி வரிசையாக  இருக்கும் .

இது தான் கிழக்கிலிருந்த நட்சத்திரத்தை மூன்று ராஜாக்கள் தொடர்ந்தார்கள் என்று வாசித்திருக்கிறோம் .அது வழி காட்டும் என்றும் கூட ..

சூரிய உதயம் ,சூரியனின் பிறப்பு .

கன்னி கழியாத பெண் 

மேரி என்பது  வெர்கோ எனும் உடுமண்டலத்தொகுதி . வேர்கோவின் லத்தீன் பெயர் வெர்ஜின் . வெர்ஜின் என்பது கன்னி கழியாத பெண் . M எனவும் எகிப்தில் அழைக்கப்பட்டது .



அது தான் புத்தாவின் தாய் மாயா(MAYA ) ,மைரா(MYRA ) போன்றோரின்  பெயர்கள் M இல் ஆரம்பிக்கிறது .

வெர்கோ =HOUSE OF BREAD  எனவும் அழைக்கப்பட்டது . பெத்லஹெம் இன் இன்னொரு பெயர் தான் HOUSE OF BREAD . 

பெத்லஹெம் என்று ஒரு இடம் உலகில் இருந்திருக்கவில்லை .வானத்தில் தான் உண்டு .

 இலையுதிர் காலம்,குளிர் காலம் என காலங்கள் மாறும் போது சூரியன் வடக்கிலிருந்து தெற்க்கே வீழ்வது போல தோன்றும் . அதுவும் டிசெம்பர் மாதம் முதல் சூரியன் தெற்க்கே கீழே நகரும் .

டிசெம்பர்  22 ஆம் திகதி போல சூரியன் மிகவும் கீழ் நிலையில் இருக்கும் .அதாவது சூரியனின் இறப்பு .அதாவது தெற்கு நோக்கி சூரியன் செலும் . மூன்று நாட்கள் கழித்து மீண்டும் மேலும் வடக்கு நோக்கி ஒரு பாகை மேல் எழும்பும் . இது தான் மூன்று நாட்கள் இறந்து மீண்டும் உயிர்த்தெழும் .

முக்கியமாக 12 இலக்கங்கள் . 12 தோழர்கள் ஜோசெப்புடன் மற்றும் நபியையும் 12 பேர் தொடர்ந்தனர் என வரிசை நீள்கிறது . சூரியன் 12 ராசிகளுடனும் பயணிப்பதை குறித்ததே இவை .

கூடுதலாக  பைபிளில்  வசனங்கள்  சூரியனை குறிப்பனவையாவே இருக்கின்றன .
AS LONG AS I 'M IN THE WORLD
I 'M THE LIGHT OF THE WORLD "
ஜான் 9 :5

"இந்த உலக அழிவில் உங்களை சந்திப்பேன் " இயேசு பைபிள்   .2  மீன்கள் கொண்டு   பலர் பசியை ஆற்றினார் ???? காரணங்கள்   தொடரும்   .....

Religion is slavery .......

4 comments:

philosophy prabhakaran said...

ஆராய்ச்சியெல்லாம் பயங்கரமா இருக்கே...

டி.சாய் said...

01.எப்போது மதங்களை ஸ்தபனப் படுத்தி அவற்றினை பணம் ஈட்டும்.. தொழிலாக மாற்றிக் கொண்டார்களோ அப்போதோ அவற்றின் இருப்புக்களின் மீதான கேள்வி மிகவும் அவசியமானது.
02.அன்பையும்,சமத்துவத்தினையும் போதிக்க உதித்த மதங்களின் பொயரினால் மதக்கலவரங்கள் உருவானா போது.. அதை அந்த அந்த மத தலைவர்களே முன் நின்று நடத்திய போது- அம் மதங்களின் மீத கேள்விகள் அவசியமானதாகும்... புனிதம்,பயம் போண்ற சமாச்சாரங்களை ஒதுக்கிவிட்டு விவாதிக்க வேண்ண்டிய விடையம் இது. அவ் வகையில் பயனுள்ள பதிவு!!!

டி.சாய் said...

டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்கலையரசனின் இந்தப் பதிவையும் படித்து பாருங்கள்

S.Sudharshan said...

மிக்க நன்றி டி.சாய் :)...மதங்கள் எல்லாமே அடிப்படையில் ஒன்று ஒவ்வொருவரும் தாம் விரும்பியது போல தமது சுயலாபத்திர்க்காக மாற்றி அமைத்து விட்டார்கள் ..

ஏன் ?