ஆள் ஆளுக்கு காதல் பற்றி எழுதிறதெண்டு கிளம்பீட்டாங்க . ஆனாலும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே . பிடிச்சிருந்த வாசியுங்க இல்லன்ன பிறேண்ட்சாவே இருப்பம் . எதோ எல்லாரோடையும் பகிரோணும் எண்டு தோணிச்சு . இதெல்லாம் பிகர்களுக்கு ..கண்டுக்காதீங்க பாஸ் .இது கவிதையும் இல்லை கட்டுரையும் இல்லை . ஒரே மிக்ஸிங்.. கொஞ்சம் வித்தியாசமா ...

காதல் என்னவென்று தெரியாது
எண்ணங்கள் கற்பனைகள் ஒன்றித்ததது
பார்த்ததும் தோன்றவில்லை
காமம் இல்லையென்றது உறுதி
வழியவும் இல்லை உன்னத உணர்வு
உறவு பெயர் கொண்டு அவள் அழைக்கவில்லை நட்பும் இல்லை.
அவள் சுடிதாரில் ஒளிந்திருந்த பெண்மை
பார்வைகளை நெற்றி பொட்டில் ஒழித்து
வைத்தவள்.
உதட்டோரம் ஒளிந்திருந்த குறுஞ்சிரிப்பு
உடனே கதைக்கவில்லை.
குலம் கோத்திரம் எதுவும் தெரியாது
தேவையும் இல்லை.
ஆறுதலாக கதைத்தோம் ஆழமாக போனோம். வேண்டாமடா எண்டது அறிவு
அதை தான் நாம எதுலயும் கேக்குறேல்லையே
விளிக்கும் இமைகளில் ஒரு சோகம்
அவள் தனிமை தான் காரணம்
என் தனிமை அவள் தனிமை நம் இணைவில் நீங்கியது
அவள் தனிமை நீக்க வந்தவன் தனிமையோடு ....
ரசனைகளுடன் ஒன்றியவள் ....
காதல் எல்லை இல்லாதது
ரசனைகள் போல
நீண்ட இரவில் எல்லை இல்லா ரசனைகள்..
அவள் குரலால் இரவின் ஆழ்ந்த அமைதியில் உரைத்தவைகள்
அவளோடு நான் உரைத்த ஆசைகள்
உணர்வோடு உள்ளுயிரில்
தனிமை+இசை+காதல் இருவருள்ளும்
ஒரு சந்தோஷம்
காதல் என்னவென்று புரிந்தது
இரவுகளில் விழி மூடி கதைக்க கற்றுக்கொடுத்தவள்
பெரிதாக அலட்டவில்லை ... கற்பனைகளுடன் தொடர்ந்தது.
கற்பனையில் குடித்தனம் காதல் எல்லாம்
விழிகள் மூடிய படி
அழகான வீடும் கூட அதுவும் ரெட்டை பெண் பிள்ளைகளோட
சின்ன ஈகோ க்களோட வாழ்க்கை
சின்ன சின்ன சண்டை
ரசனையான வாழ்க்கை...
ஒரே வார்த்தை
ரெண்டு பேரும் made for each other

காலை மலர்வதும் இரவு நீளுவதும் அவள் குறுஞ்செய்தியில்.
உணர்வோடும் எண்ணங்களோடும் கலந்து விட்டாள்
இது சரி வராது எண்டு உடன கேட்டு போட்டன்
நம்மட வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு போர்முலா தான்
பதிலா காத்திருக்க சொன்னதும் ஒரே சந்தோசம்...
ஒரே டூயட் தான்
அந்த நேரம் ரிலீஸ் ஆனா நெஞ்சே நெஞ்சே ,விழி மூடி யோசித்தால் பாட்டுகள் தான்.
காத்திருந்த நாட்கள் அவள் தன் நண்பியை நச்சரித்த படி.....
சில நாட்கள் கழித்து பெரிய இடி
கிளைமாக்ஸ் தான்
வழமை போல பெண் தோழிகள் தொல்லை தான்
அது தானுங்க நண்பி சொன்னாவம் ...என்ன கொடுமை இது
எந்த உயிர்தோழி போலவடா நீ என்று சொன்னாளோ
அதே தோழி தான்..

உயிரைத்தருவேன் என்று சொல்லவில்லை
உயிராய் இருந்தேன்
உனக்காய் காத்திருப்பேன் என்று சொல்லவில்லை
அவளை விட்டு பிரிந்ததில்லை... அவளும் தான்..
பிரிய மாட்டேன் என்று நண்பி அனுப்பிய குறுஞ்செய்திகளை
போர்வர்ட் செய்தவள்....
ஆனாலும் உணர்ந்து அனுப்பியிருந்தால் பிரிந்திருக்க மாட்டாள்
குழப்பத்துடன் நான்......
அவள் உணர்ந்து அனுப்பியவை சில இன்னும் என் இன்பாக்ஸ் க்குள்.
பேசிய வார்த்தைகள் காற்றோடு
சாட்ச்சிகள் இல்லை
ஒரு நிமிடமும் எனை விட்டு பிரிந்ததில்லை
ஒரே இரவில் ரேடியோவில் இரவின் மடியில் ,நேற்றைய காற்று எல்லாம்
நிகழ்ச்சி தொடருகிறது உறவு தொடரவில்லை
ஒரே இரவில் தொலைபேசியில்
அவளோடு படங்களும் கூட ...
உண்மைக்காதல் எங்கிருந்தாலும் புண் படுத்துவதில்லை
ஒரேயடியாக விலகி விட்டேன்
அவள் எனக்கு கொடுத்த பிரிவின் வலிகள் அவளுக்கு
அக்கறை இல்லையெண்டது தெரிஞ்சது...
உறவுகள் கிடைத்த உடன்
தனிமை போக்க வந்தவன் தேவையில்லை எண்டு
முடிவோ தெரியவில்லை.
உணர்வின் வலிகள் இனி ஒரு போதும் அவள் பக்கம் செல்ல விடாது.
ஓங்கி யாரோ அடிச்ச மாதிரி இருந்தது (திரும்பவும் )
திடுக்கிட்டு முழிச்சா அம்மா ...
அப்புறம் அது கனவெண்டு தெரிஞ்சுது .
முதலே அம்மா தட்டினவ நான் எழும்பேல்ல.
அப்பவே எழுபியிருக்கொனும் ஏதோ ஒரு மயக்கம்.
கொஞ்சம் விரக்தி மனதில் நினைத்தவள்
கனவில் அல்லவா
மீண்டும் அப்பிடியொரு கனவு வருமோ எண்டு
ஆனால் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள்
காய்ந்த அடையாளம்
இது கனவா நெஜமா ஒரு குழப்பம்!
மீண்டும் தனிமை விழித்தது
ஆனாலும் கனவுகள் வீணாகாது
செயல் வடிவம் கொடுப்பேன்
ஆனால் அவளுடன் அல்ல...
நிச்சயமாக இல்லை...
இன்னொரு நிஜத்திட்க்கு...