தொடருபவர்கள் - நன்றிகள்

Sunday, February 28, 2010

விண்ணைத்தாண்டி சில்லறை விமர்சகர்களை தாண்டி ..

மீண்டும் ஒரு பதிவு விண்ணை தாண்டி வருவாயா பற்றி . முதல் பதிவு விமர்சனம் எண்டதால படத்தை பற்றி நிறைய சொல்ல முடியேல்ல . சில விமர்சனங்கள் , சிலர் மேலும் கடுப்பேற்றியதால் மீண்டும் எழுதுகிறேன் .காதலை காதலிப்பவர்களுக்கு உண்மையாகவே விண்ணை தாண்டி வந்த ஒரு காதல் கவிதை .

ஒரே வார்த்தை விண்ணைத்தாண்டி வருவாயா உலகப்படம்.



பல நல்ல விமர்சனங்கள் கவர்ந்தன .

முதல் எல்லார்(சில) மேலயும் ஒரு குமுறு குமுரீட்டு என்ட கருத்தை சொல்லுறன் .இது விமர்சனம் இல்லையுங்க. நீங்களும் உங்கட மனதில்லை யோசித்தவையா இருக்கும் .

ஒரு படம் இயக்குவது என்பது நல்ல ரசனை சிந்தனைகள் உள்ளவனுக்கு கடினமான விஷயம் அல்ல விருப்பமான விஷயம் . ஒவ்வொரு பிரேமும் செதுக்கப்பட்டவை . அவற்றை வெறுமனே கதை சரியில்லை , முதல் பாதி சிறப்பு பின் பாதி சரி இல்லை . இன்னும் வேகத்தை கூட்டி இருக்கலாம் என்று ஏதோ ஆக்க்ஷன் படத்துக்கு விமர்சனம் எழுதிற மாதிரி. ஆக்க்ஷன் படத்துக்கும் விமர்சனம் எழுதும் போதும் வெறுமனே கதையை வைத்தே விமர்சனம் முடித்து விடுவார்கள் . " அரைத்த மாவு புளித்த மாவு" எண்டு .

மென்மையான காதல் படங்கள்ல வேகத்தை கூட்டுறதுக்காக கடைசிலை என்ன பயர்லையும்(fire ) டாடா சுமொவிலயுமா கிளைமாக்ஸ் வைக்க முடியும் . காதல் படம் மென்மையாக தான் குடுக்க முடியும் . கூட்டினால் உணர்வுகள் வெளிப்படாது .

ஆங்கில திரைப்படங்கள் கூட காதல் திரைப்படம் என்றால் கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் ஓடும் . வேணும் எண்டா கிராமத்துல ஓடுற ரயின்ல ஏத்திற மாதிரி சீன் எடுத்தா , இல்லன்னா அப்பாவோட ( வில்லனோட) சண்டை பிடிச்சு லவ்வ வின் பண்ணா கை தட்டு வேற .

உங்களை மாதிரி ஆக்களை பாத்து தான் பாதி பேர் லவ்வே பண்ணுறதில்லை. ஏதோ லவ் பண்ணா பெரிய குற்றம் மாதிரி இந்த மாதிரி கிளைமாக்ஸ் வரும் எண்டும் பயந்து பொய் இருக்குதுகள்.

காதலை அழகாக காட்டிய கவுதம் மேனனுக்கு பாராட்டுக்கள்(வணக்கத்துடன் ). காதல் உண்மையிலேயே அழகான விஷயம் மட்டுமே. உண்மையாக இந்த படத்தில் வில்லன் அவர் அவர் மனசுகளே . சரியான விளக்கம். வில்லன்(அப்பா , அண்ணா ) மாதிரி வாறவனுங்கள் பாதிலேயே போறது நல்லம் . அவர்களின் மனதில் எழும் குழப்பங்கள் பிரச்சனைகள் காட்டியிருக்கும் விதம் அருமை . அக்ஷுஅலா நான் ஜெசிய choose பண்ணேன் என்பது யதார்த்தம்.



சிலவை புதுசு அல்ல . அதே மதப்பிரச்சனை போன்றன . இங்கு மொழியும் வயதும் இன்னொரு பிரச்சனை . வயதை இருவரும் பொருட்டாக எடுக்காதது உண்மை .
காதல் மட்டுமே தெரிகிறது .

சில காட்சிகள் அதே என்றும் இன்னொரு விமர்சனம் வாசித்தேன். காட்ச்சிகள் என்று நீங்க எதை சொல்லுறீங்க . ஷங்கருக்கு 50 கோடி குடுத்தாலும் இப்பிடி காட்சி அமைப்பு எடுக்க மாட்டார் . அவருடைய பாணி வேறு .

ஒவ்வொரு பாடல்களும் மனதில் , காட்சி அமைப்பு பார்த்ததும் இன்னும் பிடிக்கிறது. பாடல்கள் பற்றி தனி ஒரு பதிவே எழுதியிருக்கிறேன் . வெறுமனே சொல்லி முடித்து விட முடியாது . முக்கியமாக மன்னிப்பாயா பாட்டுக்கு சிம்புவின் முகத்தை நிலவோடு சேர்த்தது அருமை .

காதலின் நெருங்கிய உணர்வை (romantic ) காட்டிய கவுதமிட்க்கு ஸ்பெஷல் பாராட்டுகள் . அதுக்கும் ஏன் தான் சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை .
அருமையான திரைக்கதை ஓட்டம் . முடிவை மாற்றாமல் விட்டால் நல்லது .

என்ன ஒரு தைரியம் . அதுவும் தமிழ் சினிமா கொடுக்காத ஒரு பாணி. இருவருக்கும் தான் . ரகுமானுக்கும் தான் . பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்டால் விளங்கும் .
தமிழ் இசைக்கு அனைத்தும் புதிது . பின்னணி இசையிலும் தரம் தெரிகிறது. மசாலாக்களுக்குள் இரு முத்துக்கள் .



ஏன் தான் கூடுதலான விமர்சகர்கள் காட்சி அமைப்புகளையோ பின்னணி ஒலிப்பதிவையோ சொல்லுறதில்லையோ தெரியேல . முக்கியமாக விண்ணை தாண்டி வருவாயா கலை , ஆடை வடிவமைப்பு , காட்ச்சிகள் அனைத்தும் பிளஸ். யாரும் கூறியதாக தெரியவில்லை . வேறு படங்களில் சேர்த்து காண முடியாதது .

தனிப்பட்ட நாயகனின் விருப்பு வெறுப்புக்காக , நாயகியின் விருப்பு வெறுப்புக்காக விமர்சனம் எழுதுபவர்களும் இருக்கின்றனர். இனி மேலாவது விமர்சனங்கள் எழுதும் போது பிளஸ் ஐயும் மயினசையும் சொல்லுங்கள் . வேரோனே ஒரு பார்வையில் சொல்லாதீர்கள் . சில படங்களை சொல்லலாம் தான் .. தரமான படங்கள் எவளவோ மட்டமான காரணங்கள் வைத்து தட்டப்பட்டுள்ளன .

அந்த திரைப்படத்தில் உணரவேண்டியவை எவளவோ . சிலர் உண்மை வாழ்க்கையில் கதைத்த வசனங்கள் . உண்மையான வாழ்க்கை ஒரு படமாக .

ஒரு படத்தை பார்க்கும் போது காட்சி அமைப்புகள் இயக்குனரின் உச்ச கற்ப்பனை. கவுதமின் சிறப்பு தெரிந்தவர்களுக்கு தெரியும் .

கவிதை போல , வெளியே வரும் போது புன்னகை + கண்ணீரை சேர்த்து கொடுத்த வாசுதேவ மேனனுக்கு பாராட்டுக்கள் . கிளைமாக்ஸ் மாத்தாமல் விட்டால் நல்லது .

Friday, February 26, 2010

விண்ணை தாண்டி வருவாயா - யதார்த்தமான காதல் காவியம்

பரீட்சை முடிந்த உடனேயே விண்ணை தாண்டி வருவாய் போறதெண்டு முடிவே பண்ணியாச்சு . நீண்ட கால எதிர்பார்ப்பு வேற , கவுதம் மேனன் படங்கள் என்றாலே வழமையாக உயிர் . எப்பிடியோ முதல் நாள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சிட்டுது. வந்த உடனேயே எழுதும் பதிவு

ஒரு வருட கால எதிர்பார்ப்பு. பூர்த்தி செய்திருக்கிறார் கவுதம் மேனன் . சிறந்த ஒரு ரசனையாளன் படைப்பாளி என தன்னை மீண்டும் நிலை நிறுத்தி உள்ளார் . நிறைய காலத்திற்க்கு பின் ஒரு சிறந்த படைப்பு விண்ணை தாண்டி வருவாயா.உண்மையிலேயே விண்ணை தாண்டி விட்டார் கவுதம் மேனன்



முதலில் இருந்தே கவுதம் மேனன் படங்கள் என்றாலே காட்சி அமைப்புகள் தான் நினைவு வரும் . எதிர் பார்ப்பை தாண்டி அருமையாக காட்சி அமைப்பு . முதலிலேயே விண்ணை தாண்டி வருவாயா கண்களுக்கு விருந்து .வழமை போலவே தனது பாணியில் யதார்த்தமான கதைக்கருவை கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.


கதை என்று பார்த்தால் யதார்த்தமாக உருவாகும் காதல் .தமிழ் பேச கூடிய மலையாள கிறிஸ்தவ பெண் திரிஷா , சிம்பு இந்து . சிம்புவின் லட்ச்சியமே படம் எடுக்க வேண்டும் என்பது . திரிஷாவோ படமே பார்த்ததில்லை. காதலில் ஜெயிக்க சிம்பு( கார்த்திக் ) செய்யும் வேலைகள் அனைத்தும் ரசிக்கத்தக்கன . பின்னர் திரிஷாவும்( ஜெசி ) காதலில் விழுகிறார் . இதில் என்ன வித்தியாசம் என்றல் ஒரு பெண்ணின் உண்மைக்காதலையும் எடுத்து காட்டியிருப்பது தான். இருவரும் காதலிக்கிறார்கள் . சந்தர்ப்பம் உறவுகள் வழமை போல காதலை பிரிக்கின்றன .



இறுதியில் உண்மைக்காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஜெயித்தார்களா ? யதார்த்தம் ஜெயித்ததா ? என்பதை உண்மையாக மிக மிக வித்தியாசமான பாணி யதார்த்தமான காட்சி ஓட்டங்கள் வைத்து பூர்த்தி செய்திருக்கிறார் .படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். சினிமா காதலையும் உண்மையான காதலையும் ஒப்பிட்டு அருமையான விளக்கம்.

காதலின் குழப்பம் நிறைவாக காட்டப்பட்டுள்ளது .

காதலர்களுக்கு இடையே காதலில் ஏற்ப்படும் பிரச்சனைகள் , குழப்பங்கள் நம் கண் முன்னே அப்படியே . நான் ஏன் ஜெஸ்ஸி ய லவ் பண்ணேன் தெரியுமா என சிம்பு அடிக்கடி கேட்பது உருக வைக்கிறது .அனைவரும் கூடுதலாக நமக்கிடையே கேட்டுக்கொள்வது தான் . திரிஷா குழம்புவதும் மீண்டும் காதல் ஏற்ப்படுவது யதார்த்தம் .
ஒவ்வொரு காட்ச்சிகளில் முன்னைய காட்ச்சிகளுக்கு விளக்கம் . அவற்றை தொடர்பு படுத்தி கோர்த்து கொடுத்த பாணி அருமை .



ஒளிப்பதிவில் மனோஜ் பின்னி எடுத்திருக்கிறார். கவுதம் மேனன் காட்சிகளில் குறை இல்லை என்பது படத்தை பார்த்தால் விளங்கும் . பாடல்களின் காட்சி அமைப்புகள் சில வெளி வந்தது தான். ஒவ்வொரு காட்ச்சியிலும் கதைக்கு ஏற்ப்ப தேர்ந்து எடுத்த இடங்கள் அனைத்தும் மனதில் . காதல் காட்ச்சிகளுக்கும் நெருக்கமான காட்சிகளுக்கும் நேர்த்தியான ஒளிப்பதிவு. முக்கியமாக கேரளா காட்ச்சிகள் கோவா , அமெரிக்கா காட்ச்சிகள் போன்றவற்றில் பின்னி எடுத்திருக்கிறார். இரவில் சிம்பு மதிலில் ஏறி இருக்கும் போது நிலவுடன் சேர்ந்து எடுத்த காட்ச்சிகளுக்கு சபாஷ் . சில காட்சி அமைப்புகளில் நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டார் ஒளிப்பதிவாளர்.

ஒலிப்பதிவு சொல்லவேண்டுமானால் தனியாக ஒரு பதிவே எழுதலாம். ரகுமான் இந்த படத்தில் முழுதாக ஒரு பாகம் . பின்னணி இசை பின்னி பெடல் எடுத்து விட்டார் . கிடார் வயலின் இசைப்பாடல்கள் ஆரோமலே , கண்ணுக்குள் கண்ணை வைத்து ஸ்பெஷல் . அனைத்து பாடல்களுமே சிறப்பு . மற்றைய பாடல்களும் அனைவருக்கும் இனி பிடிக்கலாம். பினனனியில் பியானோ , கிடார் இசைகள் பிளஸ் . ஆரோமலே புதிய இசை அறிமுகம் தரமாக .தாமரையின் வரிகள் பாடல்களுக்கு மேலும் மெருகு

முக்கியமாக கவுதம் படங்களில் கலை வடிவமைப்பாளர்கள் முக்கியமாக பாராட்ட பட வேண்டியவர்கள். ஒவ்வொரு காட்ச்சிகளும் சரி , நாயகன் ,நாயகி உடை வடிவமைப்புகளும் சரி அனைத்துக்கும் ஒரு சபாஷ் . கலை ரஜீவன் . ஆடை வடிவமைப்பு நளினி சிறிராம் . சிறந்த கற்ப்பனை . பொருத்தமான எளிமையான வடிவமைப்பு .



நாயகி திரிஷா(ஜெசி )
இது வரைக்கும் பார்த்திராத திரிஷா . எளிமையான உண்மையான நடிப்புக்கு பாராட்டுக்கள். இவ்வளவு அழகாக யாரும் திரிஷாவை சேலைகளில் காட்டியது கிடையாது .

நாயகன் சிம்பு (கார்த்திக் )
சிம்புவும் இதுவரை யாரும் பார்க்காத சிம்பு தான். கூடுதலானோருக்கு சிம்புவை பிடிக்கலாம். மிகவும் அமைதி ,எளிமை . எளிமையான தோற்றம் . கலக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். உடை வடிவமைப்புகளுக்கு முக்கிய பாராட்டுகள்.

கே எஸ் ரவிக்குமார் , சிம்புவுடன் இருக்கும் இயக்குனர் போன்றோரே வெளியானவர்களில் படத்தில் அடையாளம் காட்ட கூடியவர்கள். வேறு ஒருவரும் மனதில் நிற்க்கவில்லை.

சில வசனங்கள் ஜொலிக்கின்றன . திரிஷா காதலுக்கு சமயம் , மொழி ,அப்பா காரணம் காட்ட கடைசியா உன்னை எனக்கு பிடிக்கணும் என ஒரு காரணத்தையும் திரிஷா சொல்ல. இது காரணம் என்று சொல்லும் இடம் அருமை . தனக்கு திருமணம் நிச்சயித்து இருக்கு என்ன பண்ணட்டும் கார்த்திக் என்று திரிஷா சொல்ல " நீ ஒன்னும் பெர்மிஷன் கேட்டு வரேல்லையே பொய் கல்யாணம் பண்ணிக்க ஜெசி " என்று சொல்லி அனுப்பது மிக அருமை .



கவுதம் மேனனுக்கு எங்கிருந்து தான் இவளவு அருமையான ரசனைகளோ தெரியைல்லை. அவருக்கு அமையும் ஒளிப்பதிவாளர்கள் கலை வடிவமைப்பாளர்களுமோ தெரியவில்லை . ரகுமானின் இசை , ஓளிப்பதிவு, யதார்த்தம் , கவுதமின் அருமையான படைப்பு . இவை அனைத்தும் விண்ணை தாண்டி வருவாயா ஒரு படமல்ல யதார்த்தமான அழகான கண்ணீர் கவிதை என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் .

படத்தை பார்த்தால் கண்ணீரும் புன்னகையும் ஒரு நிறைவும் இருக்கும் .
மற்றைய இயக்குனர்களின் காதல் படங்கள் முழுவதும் பொய் என்றால் கவுதமிடம் யதார்த்தம் இருக்கும் .உண்மையான யதார்த்தமான காதலையும் காதலர்களையும் காட்டிய கவுதமிட்க்கு பாராட்டுக்கள் . சினிமா காதலையும் யதார்த்தத்தையும் சேர்த்த விதம் அருமை .

உண்மையில் விண்ணை தாண்டி வருவாயா தமிழ் சினிமா காதல்களில் மனதில் நிற்க்கும். விண்ணை உண்மையாக தாண்டிய கவுதமிட்க்கும் , ரகுமானுக்கும் வாழ்த்துக்கள் . ஒரு சபாஷுடன்....

Tuesday, February 16, 2010

அதென்ன கூகிள் buzz (Google Buzz ) ...

பேஸ்புக் காலம் , இடையில் டுவிட்டேர் காலம் , மற்றபடி பேஸ்புக் த்விட்டேர் காலம் என்றாகி இப்ப கொஞ்ச நாளாகவே கூகிள் buzz காலமாக மாறியிருக்கு. ஜிமெயில் என்றாலே முதல் ஒரு காலத்தில் யாருக்குமே தெரியாது.



சமூக இணையத்தளங்கள் இப்போது போட்டியின் உச்சகட்டத்தில் இருக்கின்றன.
ஜிமெயிலும் விட்டு வைக்கவில்லை. கொஞ்ச வருடங்களுக்கு முதல் ஜிமயில் தனது சேவையில் chat வசதி போன்றவற்றை உட்ப்புகுத்தியது. இப்ப கொஞ்சம் எங்கபோனாலும் எல்லாருடைய வாயிலும் ஒரு முனுமுனுப்பு "google buzz " . அதென்ன google buzz தெளிவில்லாமல் பலர் . வந்தாலும் பாவிப்பதில் தெளிவில்லாது இருக்கின்றனர் . பலருக்கு இன்னும் வந்திருக்காது .

அதொன்றும் இல்லை google buzz சாதாரணமாக பேஸ்புக் டுவிட்டேர் போன்றதே . ஆனால் எளிமையான குழப்பமிலாத ஒரு சமூக இணையத்தளம். அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளதையும் அறிய முடிகிறது .

அவ்வாறு google buzz அழைப்பு கிடைக்க பெற்றால் உங்கள் இன்பாக்ஸ் பகுதிக்கு கீழே இவ்வாறு தோன்றும்.



அதை கிளிக் செய்தால் இவ்வாறான எளிமையானதொரு முகப்பு தோன்றும்.











அதன்மேலே உள்ள ப்ரோபையில் பிச்ச்சரை கிளிக் செய்தால் அல்லது அருகில் இருக்கும் google profile கிளிக் செய்யலாம்.
இவ்வாறான ஒரு பக்கம் தோன்றும்.




நீங்கள் சாட் செய்யும் நண்பர்கள் சாதரணமாகவே add செய்யப்பட்டு விடுவார்கள். நாங்கள் follow பண்ணுபவர்கள் ஆக . எங்களை follow பண்ணுபவர்களாக... ஒரு விதமான மாற்றங்களும் அறிமுகமும் தேவையில்லை .



எங்களுடைய தகவல்களை நாம் சமூகத்துடனும் பகிர்ந்து கொள்ளலாம் ,அல்லது எமது நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் . பகிரும் பொழுதே அதை கொடுத்து விடலாம்.

இந்த url மூலம் மற்றயவர்கள் நம்மை follow பண்ணலாம்



நாம் follow பண்ணும் லிங்க்ஸ் கொடுத்து வைக்க முடியும் . ஒருவர் கமெண்ட் செய்யும் போது அது தானாகவே எமது இன்பாக்ஸ் குள் வந்து விடும் . தவறவிடப்படாது.

படங்கள் வீடியோ போன்றவற்றை மிகவும் பெரிதாகவும் விரைவாகவும் பார்க்கலாம் . நாங்கள் பாவிக்கும் கூகிள் ரீடர் டுவிட்டேர் போன்றவற்றை ஒரே தளத்தில் வைத்திருக்கலாம் .

நிறைய பேரிடம் இந்த வசதி சில நாட்களில் கிடைக்கப்பெறும் .

ஏற்க்கனவே இருக்கிற சமூக இணையத்தளங்களே போதும் , நேரம் வீண் , படிக்க முடியவில்லை என்றால் அதுக்கு இந்த வழியை பின்பற்றுங்கள்
முற்றாக google buzz ரிமூவ் செய்வதற்க்கு...

கடைசியாக கீழே காணப்படும்



எளிமையான எதிர்பார்த்த முறை. பாவித்து பாருங்கள் புரியும். அனைவரிடமும் வரவேற்ப்பு பெற்றுள்ளதா என்று கொஞ்ச நாட்களில் தெரிய வரும் . சில இடங்களுக்கு மட்டுமே
மட்டுப்படுத்தி உள்ளது.

கூகிள் தொலைபேசிகளுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது .அடுத்த பதிவில் கையடக்க தொலைபேசிகளுக்கான கூகிள் buzz பற்றி..

Monday, February 8, 2010

A.R ரகுமான் : விண்ணை தாண்டிய இசைப்புயல் ...

சில பாடல்கள் கேட்ட உடனேயே பிடிக்கும் ,சில பாடல்கள் காலம் தாழ்த்தி பிடிக்கலாம். சில தரமான இசை அமைப்பை கொண்ட பாடல்கள் சிலரையே சென்றடைவது குறையே. ஒரு துள்ளலான இசையை சுலபமாகவேனும் அமைத்து விடலாம். ஆனால் மனதை வருடும் மெல்லிசை நிலைத்திருப்பது கடினம்.

ஆனால் ரகுமான் இதனை சரியாக கையாளுவதில் சிறந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது. கூடுதலாக ஹோசானா பாடல் மட்டுமே அனைவரையும் கவர்ந்துள்ளதாக கூறலாம். இரண்டாவதாக ஓமனப்பெண்ணெயை சொல்லலாம் .



உண்மையாக அனைத்து பாடல்களுமே என் முன்னே பழைய ரகுமானை கொண்டு வந்து சேர்க்கிறது. ரகுமானின் ரசனை குறைந்து செல்லவில்லை, அவரின் உலகத்தார இசைகளிடையே நமது ரசனை குறைந்ததாகவும் நினைத்துக்கொள்ளலாம். அது தான் உண்மையும் கூட. என்னை பொறுத்தவரை விண்ணை தண்டி வருவாயா பாடல்கள் அருமையிலும் அருமை.. ரகுமானின் துணிச்சலுக்கும்(புதிய முயற்ச்சி ) பாராட்டுக்கள் .

பெரிதாக ஓசான தவிர மற்ற பாடல்கள் பிடிக்கவில்லை என்பவர்கள் வாசித்த பின்னர் மீண்டும் கேட்டு பாருங்கள்.

சரி நாங்க அப்பிடியென்ன சிறப்பு எண்டு பாப்பம்.

ஆரோமலே...

ஆரோமலே பாடல் முதல் முதல் கேட்க்கும் போது ஏதோ ஒப்பாரி கேட்பது போன்று தோன்றும். என்ன மொழி என்றும் புரியாது. ஆரம்பத்தில் ஆரோமலே ஒலிக்கும் . பாடல் முடியும் வரை பின்னணியில் ஒலிக்கும். இது மலையாளப்பாடல். ஆரோமலே எண்டா தமிழில் செல்லமாம்(கேட்டுக்கொள்ளுங்கப்பா ). ஆரம்பத்தில் வரும் கிட்டார் இசை முதலில் மெதுவாக வருடும்(தொடர்ந்து ). அல்போன்ஸ் இன் குரல் பெரிதாக இனிமை என்றில்லை. ஆனால் ஒரு கவர்ச்சி. மேல் இஸ்தாயியில் பாடும் போது தான் கொஞ்சம் பயமாக இருக்கும் . அலைபாயுதேயில் கேட்டிருப்பீர்கள் "மாங்கல்யம் தந்துனானே" பாடல் ரகுமானின் ஸ்பெஷல்களில் ஒன்று . அது போன்று இந்த பாடலிலும் "சுவஸ்தி சுவஸ்தி முகூர்த்தம் சுமங்கலி பவ" என்று வரும். மனதை தொடும் ( கட்டாயமாக ). பின்னணி பாடகர்களை கையாள்வதில் ரகுமான் ஜாம்பவான். பாடலின் இறுதியில் பாடலை முடிக்கும் போது "ஆரோமலே " தாழ்த்தி பாடி முடிப்பார் . முடிவில் தென்றல் போல பாடி முடிப்பார்(கீழ்ஸ்தாயியில்). அருமை....



ஹோசானா...

முதலிலேயே பாடல் வெளியாகி பெரிய ஹிட் ஆகி விட்டது. கேட்ட உடனேயே கவர்ந்த பாடல் என சொல்லலாம். ஆரம்பத்தில் ரகுமான் பாடுவது போல மயக்கம் ஏற்ப்படுத்திய பாடல் . விஜய் பிரகாஷின் அருமையான குரல். எளிமையான தாமரை வரிகள் பிளஸ் என்று சொல்லலாம்(வழமை போல ) . உயிரின் உயிரே பாடலுக்கு பிறகு ஒரு சோகமான பாட்டை இப்படியும் கொடுக்கலாமா என எண்ண தோன்றுகிறது. முக்கியமாக நெஞ்சை தொடுவது பின்னணியில் பாடும் கோரஸ் தான். இடையில் வரும் பிளாசயின் ராப் இசை , ஹலோ ஹலோ என இடையிடையே வருவது , இடையே வரும் interlude என அடிக்கிக்கொண்டே செல்லலாம் . இறுதி 60 செகன்கள் இசைக்கருவி , பாடல் அனைத்தும் உச்சத்துக்கு சென்று வருவது ஆங்கில பாணி . நல்லதொரு கற்ப்பனை. கிட்டத்தட்ட pray for me பாடலை நினைவுபடுத்துகிறது .

குறிப்பு :- ஹோசானா அல்ல .. விவிலியத்தில் வரும் ஒ சனாவை தான் தான் தாமரை கூறியுள்ளார்.

ஓமனப்பென்னே...



ரசிக்க கூடிய மெலடி . பாடலின் ஆரம்பம் மலையாள வார்த்தை . இடையில் கல்யாணி மேனன் பாடிய மலையாள வரிகள் இது ஒரு மலையாள பின்னணி பாடல் என நினைக்க வைக்கிறது(ஆரோமலேயுடன் ) . வரும் ஆரம்பத்திலிருந்தே பின்னணியில் ஒலிக்கும் இசை இனிமை(பாடல் முடிவு வரை மெதுவாக ஒலிக்கும் ) . உன்னிப்பாக கவனித்தால் விளங்கும் . ரகுமானின் கவரும் பாணியில் இதுவும் ஒன்று. மேலைத்தேய இசைக்கருவிகளாக இருந்தாலும் இறுதியில் மேலைத்தேய இசைகளுடன் நமது நாதஸ்வர இசையையும் சேர்த்திருப்பது ஒரு சிறந்த கற்பனை . பாடலின் இறுதில் எமது இசையையும் மேலைத்தேய இசையையும் இணைத்திருப்பது இளையராஜாவின் சிஷ்யன் என்பதை நினைவூட்டுகிறது . பென்னி தயாள் அனுபவித்து ஒவ்வொரு வரிகளையும் பாடியுள்ளார் . அதே எளிமையான தாமரை வரிகள் . ஆனால் இதில் வரிகள் பெரிதாக எடுப்படவில்லை.

கண்ணுக்குள் கண்ணை...

நரேஷ் அய்யர் பாடியிருக்கும் பாடல் . ஒரு வேகமான இசை, தாளங்கள் கொண்ட பாடல் . இடையிடயே வயலின் பாவனைகளோடு, பின்னணி குரல்களோடு அருமையாக கொடுத்துள்ளார் ரகுமான். இடையில் ரகுமான் வழமை போல தனது குரலில் பாடும் "உன் நண்பன் இல்லை" உச்சக்குரலில் அருமை . வயலின் இசை தொடருகிறது. கூடுதலாக இசையில் உச்ச தரமான இசைக்கருவிகள் பாவனை தெரிகிறது . வேகமான பீட்டுக்கு ஏற்ப்ப வயலின் இசையும் சேர்ந்து வரும்(அருமை ) . "நீயும் நானும் ஒரே புள்ளி" என பின்னால் பாடும் பின்னணி(கீழ்ஸ்தாயியில் வந்து செல்லும் ). தொடர்ந்து "அன்பே ஓடோடி" பாடும் போது ஒவ்வொரு முறையும் அதன் முறையில் மாற்றம் . பாடகர்களை இளையராஜாவுக்கு பிறகு ரகுமானின் பாவனை அதிகம் எனலாம்

மன்னிப்பாயா...

இதுவரை ஒ சனா வை விட கூடுதலாக பிடித்த சிறந்த பாடல் என்றால் அது மன்னிப்பாயா .. இந்த முயற்ச்சிகள் ரகுமானால் மட்டுமே மேற்க்கொள்ளக்கூடியது. ஸ்ரேயா கோஷல் சொல்லவாவேண்டும். முன்பே வா அன்பே வாவை மிஞ்சி விட்டது . ரகுமானின் இசைக்கோர்வையை கவனியுங்கள்(யாராலும் முடியாது ) . வரிகளும் அருமை எனலாம் . ரகுமானின் இஸ்டயிலில் மேலும் ஒரு முன்னேற்றம் எனலாம் இந்த பாடலை . "ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்" முதல் குரலிலேயே கவர்ந்தது தான் ஸ்ரேயா கோஷல் ." மன்னிப்பாய " உண்மையில் உருகி உணர்ந்து பாடுவார் . தொடர்ந்து ரகுமானின் குரல்(எதோ ஒரு வசீகரம் ஆரம்பத்தில் இருந்தே/எப்போதுமே ).



வருடும் பின்னணி இசை தொடர்ந்து பின்னணியில் வரும் ஒரு மெல்லிய இசை(கவனியுங்கள் ). ரகுமானின் குரலில் "காற்றிலே ஆடும் காகிதம் நான்... நீ தான் எனை கடிதம் ஆக்கினாய்" அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்" இரவில் தனிமையில் கேட்டால் கட்டாயம் கண்ணீர் வரும். தன்னால் மட்டுமே உணர்ந்து பாட முடியும் என பாடியுள்ளார் ரகுமான் . "அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாள் "

மேலும் மேலும் உருகி உருகி.. உண்மையில் ரகுமான் உருகி தான் .
இடையில் திருக்குறளை மேலைத்தேய பாணியில் கொடுத்திருப்பது பிளஸ் . "அனைவரும் உறங்கிடும் நேரம் அது எனக்கு தலையணை அணிக்கும் நேரம்" என்பன தாமரையின் சிறப்பு .

பாடல் முடியும் போது அமைதியாக முடித்திருப்பார் ம்ம் என்று ஸ்ரேயா கோஷல்(மெல்லிய இசையுடன் ) .

விண்ணைத்தாண்டி வருவாயா ...

பின்னியிருக்கிறார் ரகுமான். கிட்டாரும் பியானோவும் பின்னணியில் ஒலிக்கும். மிகவும் அமைதியான பின்னணியில் கேக்க வேண்டிய பாடல் . கார்த்திக் பின்னி விட்டார். உருகியுள்ளார் . கொஞ்சம் சத்தமான குரல் மெதுவாக ஒலித்திருக்கிறது . "நேற்றும் இரவும் உன்னோடு இருந்தேன் அதை நீயும் மறந்தாயா" போன்ற வரிகளை அருமையாக ராகத்துடன் கையாண்டுள்ளார் . வருவாயா என பாடலை முடிக்கும் போது பியானோவும் சேர்ந்து முடிக்கும் . மேலைத்தேய சிறந்த இசை முறை ." உயிரே நீ போனாலும் பிரிந்தது புவியீர்ப்பு மையத்தில் தானே " கஷ்டப்பட்டுள்ளனர் தாமரை வரிகளுக்கு இணங்க .

ஒவ்வொரு பாடலிலும் புதிய அணுகு முறை . இவ்வாறான அணுகு முறைகள் ஆயுத எழுத்திலும் கையாண்டிருந்தார் . படம் பெரிதாக எடுபடவில்லை(சிறந்த படம் ).
இந்த முறை கவுதம் மேனன் பாடல்களுக்கு காட்ச்சிகளில் பிழை விட மாட்டார். காட்சி அமைப்பு என்றால் அது கவுதம் மேனன் தான்.

Sunday, February 7, 2010

அழுத்தமில்லாத அழகான வாழ்க்கையும் கூகுளும்

அசல் விமர்சனத்துக்கு ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ஹிட்சுகளை கொடுத்து தமிழிஷில் இன்று காலை வரை 33 வாக்குகளுடன் முன்னணியில் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஊக்கம் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது.

உங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு ஒன்றும் பெரியவன் அல்ல. இது அறிவுரையும் அல்ல . இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் மிகமிக முக்கியமானதும் கூட . உங்கள் வாழ்க்கை ,அது எவளவு முக்கியமானது . அழுத்தமில்லாமல் பின்பற்றுவதட்க்கு வழிமுறைகள் உண்டு . எதோ கொஞ்சம் சிந்தனைக்கு ரசனைகளுக்கு எட்டியதை உங்களோடு பகிருகிறேன்.



வாழ்க்கை மிக மிக அழகானது . எதிர் மறை சிந்தனைகள் வேண்டாம். அந்த அழகான வாழ்க்கையில் நீங்கள் இருக்கும் வீட்டில் இருந்து பழகும் நண்பர்கள் முதல் , பார்ப்பவை , கேட்பவை வரை நீங்கள் அழகாக வைத்த்திருந்தால் , சுருக்கமாக சொல்லப்போனால் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம். ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு வாழ்வு தான் .

சிறந்த ஒரு உருவாக்கம், சிறந்த ரசனை சிந்தனை உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும். உண்மையான மகிழ்ச்சி நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் உண்டு . நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பது மட்டும் மகிழ்ச்சி அல்ல. செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் ரசனை வேண்டும், அதில் மட்டுமே சிந்தனை இருக்க வேண்டும் .

எல்லாரிடமும் ரசனை உண்டு ஆனால் இருக்கின்ற வாழ்க்கையை ரசனையோடு பார்க்கும் திறமை இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு ஒரு குட்டிக்கதை. யானை ஒன்று அமைதியாக நின்று உணவு உண்டு கொண்டிருந்தது. அப்ப அங்க வந்த இலையான் அதுண்ட காதில வந்து இருந்து இரைஞ்சுகொண்டு இருந்திச்சு. யானை அதை தன்னுடைய காதை சுழட்டி தூக்கி எறிஞ்சிட்டு. மீண்டும் மீண்டும் வந்து கரைச்சல் குடுக்க யானை கேட்டிச்சாம்..
" நீ ஏன் ஒரு இடத்தில் இருக்காம அலைந்து திரியிற, ஒருக்கா உணவருந்துகிறாய் பிறகு எனக்கு வந்து கரைச்சல் குடுக்கிறாய் உன்னால ஒரு இடத்தில இருக்க முடியாதா எண்டு " .



உடன இலையான் நீ மட்டும் எப்பிடி ஒரு வேலைய செய்து கொண்டு இவளவு அமைதியா இருக்கிறாய் எண்டு கேட்டிச்சாம். அதற்க்கு யானை நான் சாப்பிடுற உணவையும் ரசித்து ரசித்து சாப்பிடுறன் என் கவனம் முழுக்க என் உணவில் தான் என்றதாம்.

பேராசிரியர் டானல்ட் நோர்மன் கருத்தும் ஒவ்வொரு பொருட்களின் உருவாக்கம் , அழகான ரசனைகளுடன் கூடிய சந்தோசம்( fun ) என்பன மன அழுத்தத்தையும் போக்குகிறது என்று கூறியுள்ளார் .

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்கள் அவற்றை மாற்றி அமைக்கும் ,பயன்படுத்தும் முறை என்பன உங்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது.

இது ஒரு பழச்சாறு செய்யும் கருவி . ஆனாலும் இதை தான் தனது முன் அறையில் அழகு பொருளாகவும் பாவிப்பதாக கூறினார் . சிறந்த உருவாக்கம் தான் . சிறந்த எளிமையான கற்ப்பனை.



நீங்கள் பிரயாணம் செய்யும் வாகனம் கூட தெரிவு செய்யும் போது வெளியில் இருப்பவர்கள் யோசிப்பார்களே என வெளியில் அழகாக இருக்கிறது என்பதற்க்காக எமக்கு உள்ளே சௌகரியம் இல்லாத ஒன்றை தெரிவு செய்ய முடியாது.





இந்த வாகனம் வெளியில் பெரிய கவர்ச்சி ஒன்றும் இல்லை.உள் வடிவமைப்பு அழகு. ஆனால் உள்ளிருந்து ஓட்டும் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.


சில வடிவமைப்புகள் எம் ஆழ் மனதை கவர்வதுண்டு. அதென்ன ஆள் மனது கேட்பது விளங்குது . ஆழ் மனதில் இருப்பவை நாம் அன்றாடம் செய்யும் வேலைகள்.
இந்த வடிவமைப்பும் அனைவரையும் கவரவே.



நீங்கள் அடிக்கடி பாவிக்கும் கூகிள் ஆனால் கவனித்திருக்க மாட்டீர்கள். கூடுதலான பத்து "O " க்கள் காணப்படும் ஒவ்வொரு இலக்கத்துக்கு மேலும் . அட இன்னும் இவளவு பக்கங்கள் இருக்கு என்ற எண்ணம் தோன்றாமல் இருக்கவே இந்த வழிமுறை.

இது ஒரு பின் பாங் மேசை. ஒவ்வொரு தடவையும் பந்து அடிக்கும் போது அலைகள் தோன்றும் மீன்கள் ஓடித்திரியும். அழகாக இல்லையா.



புதிய வாழ்க்கை சுத்தி பார்க்கும் ஒவ்வொரு பொருட்களும் அழகாய் . மனதில் ஒரு சந்தோசம் . தனியான மகிழ்ச்சி(fun ). தனிமை கூட பாதிக்காது. முயற்ச்சி செய்து பாருங்கள். வாழ்க்கையில் ரசனை இவளவு முக்கியமானது. உங்களை சுத்தி சந்தோசம் இருக்கும் போது ரசனைகள் இருக்கும் போது உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் முறை உங்களிடமே இருக்கும் . பெரிய மன அழுத்தம் ஒன்றுமே இருக்காது.

அழகான வாழ்க்கை தொடரும் ..அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாம்.

Friday, February 5, 2010

விமர்சனம் -அசல் அஜித்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் வெற்றி

முதல் நாளே இரவு வெளியாகி இருந்தாலும் இப்ப தான் பார்க்க முடிந்தது . வந்த உடனேய சுட சுட எழுதிறன். நீண்ட கால எதிர்பார்ப்பு .தலைப்பிலேயே அனைவரையும் கவர்ந்த அசல், அஜித்தின்(தல) 49 ஆவது திரைப்படம். அனைவரினதும் உழைப்பு மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது அசல் திரைப்படம்.

தற்ப்போதைய தமிழ் சினிமா பாணி மாறி வருவது வரவேற்க்கத்தக்க விடயம். முன்னணி நடிகர்கள் பலர் தமது பாணியை மாற்றாத போது அஜித் முன் வந்து மாற்றியிருப்பதுக்கு பாராட்டுகள் .




தலையின் அல்டிமேட் பட்டம் இல்லாததால் கவலைப்பட்ட ரசிகர்களுக்கு , இந்த படத்தில் அஜித்தின் பெயர் துணை இயக்குனர் பட்டியலிலும் இடம் பெறுகின்றது. அனைவருடனும் இணைந்து பணியாற்றி உள்ளார்.

கூடுதலாக மாஸ் ஹீரோக்கள் தமது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. இதில் கதாநாயகிகளில் இருந்து காமெடி நடிகர் (யூகி சேது ) வரை அனைவருக்கும் முக்கியத்துவம். நம்மட ஹீரோக்கள் சிலர் ஒவ்வொரு பிரேமிலும் தமது முகம் வர வேண்டும் என்று கூறுவதுண்டு. அந்த ஆர்ப்பாட்டம் இல்லாததுக்கும் பாராட்டுகள்.அடக்கி வாசிக்கும் பிரபுவின் பாத்திரமும் நல்லதே .

யதார்த்தமான சாதாரணமான அஜித்தின் அறிமுக காட்சி (சபாஷ்) . அந்தோணி எடிட்டிங் பிளஸ், சொல்லவாவேண்டும் .

ஒளிப்பதிவு மிகவும் அருமை . ஒரு உயர்ந்த பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படம். படம் முழுவதும் பிரான்ஸ் என்றே கூறலாம். கொஞ்ச காட்ச்சிகள் இந்தியாவிலும் ( இருந்தாலும் சலிப்பிலாமல் மும்பையில் பிரமாண்டமான காட்சி அமைப்புகள் ). காட்சி அமைப்புகள் திரைப்படத்தின் தரத்தை பேணும் விதத்தில் பங்களித்துள்ளது .

முக்கியமாக ஒளிப்பதிவாளர் சண்டைக்காட்ச்சிகளில் ஹயிலயிட். அருமையான சண்டைக்காட்ச்சிகள் (நம்பும் விதமாக ) . தமிழ் சினிமா சண்டைக்காட்ச்சிகளில் முன்னேற்றம் அசல்.ஏன் ஒரு முன் உதாரணமும் கூட. அனைவராலும் ரசிக்கப்பட்டதும் கூட.



நாடுகளுக்கு ஆயுதம் சப்பிளை செய்பவர் தந்தை . இன்னொரு மனைவி மகன் அஜித். அவருடன் முதல் மனைவி மகன் சம்பத் , மற்றும் பிரதீப் மூவரும் சகோதரர்கள் .
ராஜீவ் கிருஷ்ணா( விக்கி ) சம்பத்தை மிஞ்சி விட்டார் நடிப்பில் . ஒரு வித சைக்கோ பாத்திரத்தில் பிரமாதமான நடிப்பு. சமீரா ரெட்டி(சரா ) மீது ஆசை கொண்டவராக .

சம்பத் ,ராஜீவை இயக்கும் வில்லனாக (கஜனி வில்லன் ) அமைதியாகவே இருக்கிறார். எத்தனை வில்லன்கள் இருந்தாலும் படத்தில் பளீரென தெரியும் கெல்லி டோர்ஜி (ஷெட்டி ) கலக்கியிருக்கிறார் . கத்தவில்லை கதறவில்லை என்று சொல்லலாம். வில்லனின் கதாப்பாத்திர கனதி ஷெட்டியில் மட்டும் தெரிகிறது.

சுரேஷ் , யூகி சேது படத்தின் விறுவிறுப்புக்கு துணை. யூகி சேது தனது வழமையான உண்மையான நகைச்சுவை பாணி . குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தன்னை தாதா என்று சொல்லிக்கொள்பவர்கள் உண்டு அப்படியான ஒரு பாத்திரம். அவரது ஸ்டையில் அருமை. மணிக்கூடு இல்லாத கையில் அடிக்கடி மணி பார்ப்பது , முகபாவனைகள் பிளஸ்.

படத்தில் பாடல்கள் முதலில் பெரிதாக எடுபடா விட்டாலும் ஹே துஷ்யந்தா , தலை போல வருமா பாடல்கள் திரையில் அருமை. அஜித் தன்னால் நடனமும் முடியும் என ஆடியிருக்கிறார். பாடல்களில் குறை விட்ட பரத்வாஜ் பின்னணி இசையில் கலக்கி விட்டார். வை கிங்சும் இசைக்குழுவின் ஆதரவு என்று நினைக்கிறேன். அருமையான ஒலிப்பதிவு. இரைச்சல் இல்லாத பின்னணி இசை அருமை .

கதாநாயகிகள் இருவருமே மனதில் பதிகின்றனர். பாவனா மிகவும் அழகாக தெரிகிறார்(முன்னரை விட ). பாடல்களில் (நடனங்களில் ) கூட கலக்கியிருக்கிறார்.
பாத்திரத்துக்கு பொருந்திய நடிப்பு .



சமீரா ரெட்டி வழமை போல கவர்ச்சிக்கு குறை இல்லை. அவருடைய பாத்திரம் முக்கியமானதும் கூட.

ஒவ்வொருவரும் பொருந்தி நடித்துள்ளனர். நாயகிகள் வந்தோம் சென்றோம் என்று இல்லாமல் மனதில் நிற்கின்றனர் . இயக்குனருக்கும் அஜித்துக்கும் பாராட்டுகள்.

சவால் விடும் ஆக்குரோஷமான வசனங்கள் இல்லை. வேறு ஒரு நடிகரையும் குத்திக்காட்டவில்லை. அஜித்தின் வசனங்கள் குறைவு (பாத்திரத்திட்க்கு ஏற்ப்ப) போன்றன சிறப்பு . தனக்கென மாஸ் இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம்(ரஜனிக்கு பிறகு ) . பொருத்தமான உடைகள் அலங்காரங்கள் சிறப்பு .வேறு நடிகர்களில் ரஜனி விக்ரமுக்கே பொருந்தும் .

இடைவேளைக்கு முதலே பாத்திர கனதி கூடிய வில்லன் இறந்து விடுவது கொஞ்சம் குறை. இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு அதை தூக்கி நிறுத்தியுள்ளனர். அஜித் தோன்றும் காட்ச்சிகள் குறைத்திருப்பது முன்னேற்றம்.

பழைய கதைகளாக இருந்தாலும் ( ஏதோ இப்ப வாற படம் எல்லாம் கதை இருக்கிற மாதிரி ) அதை கொடுத்திருக்கும் விதம் அருமை . தமிழ் சினிமாவின் மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

படத்தை பார்த்தால் உங்களுக்கே விளங்கும் .

அசல் - அசத்தலான வெற்றிப்படம் .

Monday, February 1, 2010

தமிழ்ப்படம் :தயிர்ல போட்டா தயிர் வடை போடல்லன்னா மெது வடை

தமிழ்ப்படம் பற்றி (ஆவ்வ்வ் ) தேவையான அளவு படத்திலை போதாது எண்டு விமர்சனத்திலையும் நோண்டி ,நக்கல், பிக்கல் எண்டு பிச்சு உதறீட்டாங்க போங்க. படத்தை விழுந்து பிரண்டு வயிறு குலுங்க சிரிச்சு சிரிச்சு உயிர் போச்சு . சிரிக்காதீங்க. சிந்தியுங்க . நம்மளும் இந்தமாதிரி படங்களை வரவேற்றிருக்கோம்.

விமர்சனம் நிறைய வாசிச்சிருப்பீங்க. இது பட விமர்சனம் அல்ல தலைப்பிலையே தெரிந்திருக்கும்



ஹீரோவுக்காக பல படங்களை ஓட வைத்தவர்களுக்கும் கொஞ்சம் விளங்கியிருக்கும். இதுக்கு கொடி பிடிக்காம ஏற்றுக்கொண்ட நல்ல இருக்கும் . அட இதை நக்கல் படமா நினைக்காம நம்ம ஹீரோ இஸ்டயில்ல படம் வந்திருக்குன்னு சொல்லுராங்கவுங்கோ . அப்பிடின்னா பாருங்களன் . என்னகொடுமை ?

சாதரணமாவே இந்தமாதிரி தமிழ் படங்கள் ஹீரோக்கள் பற்றி பதிவு எழுதினாலே ஏற்றுக்கொள்ளாம எதிர்ப்பு தெருவிக்கிறவங்க இதுக்கு தெருவிக்காம இருக்கிறது பெரிய விஷயம் போங்க.(திருந்தீட்டான்களோ )

படத்தை பாத்தவங்க (நம்மட குத்து பாட்டு ஹீரோக்கள் , முதல் பாட்டிலேயே தத்துவம் சொல்லுறவங்க ) இதய நோய் வந்திருக்கும் . தமிழ் படம் கலக்கியிருக்கு . இனி இதுக்கு மேல இப்பிடி படம் எடுத்தா( எடுப்பாங்க எண்டுறீங்க ?) , ரசிகர்கள் ரசிப்பார்களா ? தமிப்படம் தான் மனசில நினைவு வரும். வருமா? ஒரே கதைய எடுத்தாலும் பழைய பட கதைய மறந்து புதுசா பாக்குற மாதிரி பாக்குறாங்க சார்(நாயகன் முக்கியமாம் ).

முக்கியமா தமிழ்ப்பட பாட்டு பற்றி பாத்தீங்கன்னா. ஒவ்வொரு பாட்டும் கிண்டல் போங்க . ஆனா கண்ணன் எண்ட புது இசையமைப்பாளர் . அவர் புதுசு போலவே இருக்கிறார் . முதல் அறிமுகபாட்டு வழமை போல குத்து தான் . அதில திறமை பாக்க முடியாது. ஆனா ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கலக்கியிருக்க ஒரு பாட்டு ஓமகசீயா ...

அருமையான மெட்டு ஒண்டு வீணாக போயிட்டு. அதுக்குள்ள தமிழ் அர்த்தம் கண்ணாடி போட்டு பார்த்தாலும் தேட முடியாது . நாக்கு முக்க நாக்கோ ஓஹ் சகலாக.... ஒக்காந்து யோசிச்சிருக்காங்க . விவேக் ஒரு படத்திலை சொல்லி இருப்பார் . நாக்கு முக்க நாக்க ..என்ன மெட்டுடா? அவன் அவன் வெளிநாடு பொய் எல்லாம் பாட்டு கம்போஸ் பண்ணுறானுங்க .. எல்லாம் தோத்து போச்சுன்னு ...

அட அந்த பாட்டை விடுங்க. கூட எதிர் பார்த்த அறிமுகப்பாட்டு பச்ச மஞ்ச கறுப்பு தமிழன் நான் பாட்டு . வழமையா சிலருடைய தமிழ் படங்கள்ல வாற மாதிரி( இப்ப எல்லாரும் தான்) . குத்தோட தத்துவம் சொல்லுறது .

இந்த பாட்டு கேட்டா பிறகு எவனும் தத்துவம் சொல்ல மாட்டான் . "கவர்ச்சி கண்ணனே . ஏழைகளை ஏற்றி விடும் (எழைகள கவர் பண்ண ) ..நீ ஒக்கார்ந்தால் எழுந்து நிற்க்கும் எழுச்சி நாயகன் . ஒரு அப்பனுக்கு பிறந்த ஆம்பிளை " ஆரம்ப வரிகள் அட லொள்ளோ லொள்ளு.



அட கட் அவுட்டுக்கு பால் வேற( திருந்துங்க ) . பெண்கள் கும்பிடுறாங்க . ஆரத்தி காட்டுறாங்க . கலர் கலர் சட்டை ..அதே பாணி . கடைசில எல்லா கலர் தமிழன் எண்டும் சொல்லுறார் .

உலகத்தை ரட்சிக்க வந்த கடவுள் நான் தான். அட என்ன மிஞ்ச எவனும் இங்க இல்லை . நம்ம தாய் குலத்துக்கு நான் தான் செல்லப்பிள்ளை..
பின்னணில " ஆமா ராசா " ( சில வயதான பெண்கள் ) .. அம்மா செண்டிமெண்ட் தாய் குலத்தையும் கவர் பண்ணுறாராம். இதெல்லாம் நுணுக்கம் ...

2011 நம்ம கையிலை (அவ்வவ் ) .. சந்திப்போம்டா சட்ட சபையிலை... ( சரி சரி ). என் பார்வை பட்டாலே சிங்கம் அடங்கும்.. ( சிங்கம் அனிமேஷன் ) ,கண்ணெல்லாம் சிவக்குது ... அட அட இயக்குனர் கலக்கீட்டார்.

சிலர் அவரை தூக்கி (தலைவன் நீ , இறைவன் நீ )... இது வேறயா.. அகில உலக சூப்பர் ஸ்டாராம். ( ஒ மை கோட் )

இதுக்கு பிறகு தான் ஹைலயிட்டு.. ரெண்டு பேர் சண்டை பிடிக்கும் போது இடையிலை வந்து.. தயிர்ல போட்டா தயிர் வடை போடேல்லன்னா மெது வடை ,ஓட்டை இருந்தா அது ஓட்டை வடை .. என்னை வணங்கி பாரு மோட்சம் கிடைக்குமாம் ( அடுத்த சாயி பாபா ).. கூடையிலை இருந்து பூ பறக்குது (நடக்கும் போது )

ஹஹாஹ் இடையிலை டான்ஸ் மாஸ்டர் வந்து ஆடுவாரு( எல்லா படத்திலையும் மாஸ்டர் வந்து ஆடுவாங்க ஈளை அது தன வந்தான் என்பார் ) செம கடியுங்க.

இடையிலை சம்பந்தம் இல்லாத ராப். ஏஞ்சலின ஜோளியவே எங்க வைச்ச அழகன் நானாம் ( அடங்கொய்யாலே )...சிவாஜி பட ஆரம்ப பாட்டையும் கிண்டல் அடிச்சு கொன்னுட்டாரு போங்க..
ரோபோல அந்த கொடுமை நடக்காம இருந்தா சரி

வயித்திலை நாயகனின் படம் கீறி வந்து ஆடுவாங்க .. தமிழ் சினிமா கொடுமை தாங்க . இதெல்லாம் நாங்க இன்னொரு நாயகன் எண்டதால் ரசிக்கிறோம் . நாயகர்கள் மீது உள்ள மோகத்தால தவறுகளை ஏற்பதில்லை. இப்ப பார்க்கும் போது விளங்கியிருக்கும்.


தமிழ் சினிமாவில் மட்டுமே நாயகர்களுக்காக படம் ஓடுகிறது. வேறு எந்த உலக சினிமாவும் அப்படி அல்ல. அவர்களை நாம் கடவுளாக பார்க்கிறோம் . இவ்வாறான வசனங்கள் பார்க்க வைக்கிறதா அல்ல ? நாம் அவர்களை இவ்வாறான வசனங்கள் சொல்ல அனுமதிக்கிறோமா?

நான் தான் இறைவன் தலைவன் எண்டு சொல்லலும் போதே தூக்கி எறிந்தால் மீண்டும் இவ்வாறு எடுப்பார்களா ??

தமிழ் படம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்ச்சி . வரவேற்கிறேன். வரவேற்ப்போம். தமிழ் படம் பாகம் ரெண்டு எடுக்காமல் இருப்பது நமது கையில் .

ஏன் ?