தொடருபவர்கள் - நன்றிகள்

Saturday, April 24, 2010

ஐ பி எல் விருதுகள் 2010 - தொகுப்பு -கிரிக்கெட்டைன்மென்ட்

ஐ பி எல் போட்டிகள் இந்த முறையும் பெரும்பாலான ரசிகர்களை உள் வாங்கி பெரும் பரபரப்புடன் இறுதிப்போட்டியை நெருங்கி உள்ளது .26 ஆம் திகதி   சென்னையும் மும்பை அணியும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன . 

இது இவ்வாறிருக்க லலித் மோடியின் பிரச்சனை வேறு இழுபட்டுக்கொண்டே செல்கிறது . இந்த நிலையில் லலித் மோடியும் முடிந்த வரை போட்டியை இன்னும் பிரபலப்படுத்துவதில்   
 இறங்கியுள்ளார் . அதன் இன்னொரு  கட்டமாக என்றுமில்லாதவாறு இந்த  முறை சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கும் பிரம்மாண்ட விழா சற்று முன்னர் நடைபெற்றது .


சிறப்பாக விளையாடியவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கும் விழா எனவும் ஐ சி  சி , பி சி சி ஐ விழாக்களிலும் பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் கூறியிருந்தார் லிலித் மோடி . அதே  போல பாலிவூட் பிரபலங்களுடன் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் . ( என்ன இருந்தாலும் ஐ பி எல் இவ்வளவு தூரம் பிரபலமாக காரணம் என்னவோ லலித் மோடி தான் ).

22 விருதுகள் 



இதில் 10 விருதுக்கான வீரர்களை முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநாத், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாரா, அம்பயர் சைமன் டபெல், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது . எட்டு விருதுகள் பார்வையாளர்களால் தேர்வு செய்யப்பட்டது .


மூன்று விருதுகள் புள்ளிவிபரங்களை (ஸ்டேட்ஸ்) அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்டது . ஒரு விருது ஐ.பி.எல்., தொடரில் இடம் பிடித்துள்ள எட்டு அணிகளின் கேப்டன்கள் இணைந்து தேர்வு செய்தார்கள் . 

விருதுகள் விபரம் ( நடுவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட 10 விருதுகள்  )

சிறந்த அறிமுக வீரர் :-  கிரோன் போலராத் (Kieron Pollard ) - மும்பை இந்தியன்
பரிந்துரைக்கப்பட்டவர்கள் : (மைக்கேல் லம்ப், அம்பாதி ராயுடு, போலார்டு, பசல், மோனிஷ் மிஸ்ரா, டெய்ட், போலிஞ்சர். )

சிறந்த துடுப்பாட்டம் :- சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulcar ) - மும்பை இந்தியன்ஸ் 
இதுவரை 561 ஓட்டங்கள் பெற்று ஆரஞ்சு தொப்ப்பிக்கு சொந்தக்காரர் .

பரிந்துரைக்கப்படவர்கள்: ( காலிஸ், சச்சின், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ராபின் உத்தப்பா). 

சச்சின் அரையிறுதி போட்டியில் காயம்  அடைந்தது அறிந்ததே , சச்சினுக்காக அணியின் உரிமையாளர் அனிதா அம்பானி  விருதை பெற்றார் .

 சிறந்த பந்து வீச்சு :- ஓஜா (OJAH )  - டெக்கான் சார்ஜர்ஸ்  
இது வரை 20 விக்கெட்டுகள் பெற்று நீல தொப்பிக்கு சொந்தக்காரராக திகழ்பவர் . 

சிறந்த பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்:- ஹர்பஜன் சிங் (Harbajan singh ) - மும்பை இந்தியன்ஸ்

28/03/2010 அன்று  இடம் பெற்ற போட்டியில் 117 ஓட்டங்கள்  பெற்றிருந்த போது 7 விக்கெட்டுகள் இழந்து  20 பந்துகள் மீதமாயிருக்க 53 ஓட்டங்களை  குவித்தது 49 ஓட்டங்கள்  (18 பந்துகளில்)  8 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக பெற்றார் ஹர்பஜன் .   
பரிந்துரைக்கப்பட்டோர் :(முரளி விஜய், உத்தப்பா, யூசுப் பதான், ஜுயன் திரான், டேவிட் வார்னர், ஹர்பஜன், வார்ன். )

சிறந்த அதிரடியை வெளிப்படுத்திர்யவர் :- 
2008 : பிரெண்டன் மக்கலம் Brendon McCullum  ) - கொல்கத்தா நயிட் ரயிடர்ஸ் 

2009 : அணில் கும்ளே (Anil kumble ) - ராயல் சலேன்ஜஸ் 
பரிந்துரைக்கப்பட்டோர் : கில்கிறிஸ்ட், பிரண்டன் மெக்கலம், தன்வீர் .

சிறந்த  களத்தடுப்பு :-  எ பி டி விலியர்ஸ் (AB de Villiers ) - டெல்லி டேயர் டெவில்ஸ் 
பரிந்துரைக்கப்பட்டோர் :  ரெய்னா, போலார்டு, ஜூன்ஜூன்வாலா, டிவிலியர்ஸ், யூசுப் பதான், டேவிட் வார்னர். 
மிகவும் பொருத்தமாக இவ்விருது களத்தடுப்பு புலி ஜோண்டி ரோடெஸ் ஆல் வழங்கப்பட்டது . 

சிறந்த மைதானம் :-  சின்ன சுவாமி (M Chinnaswamy Stadium ) - பெங்களூர் 

பார்வையாளர்களால் தெரிவு செய்யப்பட்ட விருதுகள் ( 8 விருதுகள் )

சிறந்த பந்து வீச்சு :- ஓஜா (OJAH )  - டெக்கான் சார்ஜர்ஸ்

சிறந்த பிடி :- டேவிட் ஹஸ்சே (david hussey )- கொல்கத்தா நயிட்  ரயிடர்ஸ்
(சிக்ஸர் க்கு சென்ற பந்தை உள்ளே தட்டி பிடிக்கப்பட்ட பிடி) 

சிறந்த அணித்தலைவர் :- சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulcar ) - மும்பை இந்தியன்ஸ்  

சிறந்த துடுப்பாட்டம் :- சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulcar ) - மும்பை இந்தியன்ஸ்  

சிறந்த பந்து வர்ணனையாளர்  :- ரவி சாஸ்த்ரி (Ravi Shastri )





Most Stylish Player: ராபின் ஊத்தப்பா Robin Uthappa (Royal Challengers Bangalore)


Most Fan-Friendly Cricketer: அடம் கில் ச்ரிஸ்ட் Adam Gilchrist (Deccan Chargers)


சிறந்த பிடி எடுப்பாளர் : சுரேஷ் ராயினா  Suresh Raina (Chennai Super Kings)
Click here to watch




நிலையியல்( ஓட்ட விகிதம், பந்து வீச்சு விகிதம் )  அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டோர் (4 விருதுகள் ) 


சிறந்த பந்து வீச்சு ( குறைவான ஓட்டங்கள் கொடுத்தமை ) :- ரவிச்சந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin ) (Chennai Super Kings)

விரைவான நூறு ஓட்டம் : யூசுப் பதான் Yusuf Pathan (Rajasthan Royals)


கூடுதலான ஓட்டங்களை ஆறு மற்றும் நான்கு ஓட்டங்கள் மூலம் பெற்றவர் : விரேந்திர சேவாக் ((Virender Sehwag ) (Delhi Daredevils)


Eternal Favourite Award
 அனைத்து(எட்டு ) அணியின்  தலைவர்களாலும் தெரிவு செய்யப்பட்டது :- கபில் தேவ் ( Kapil Dev )
கபில் தேவுக்காக சுனில்  கவாஸ்கர் இந்த விருதை பெற்றுக்கொண்டார் . 




சச்சினுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் . கிரிக்கெட்டின் பிறந்த நாள் இன்று ... 

Sunday, April 18, 2010

சென்னை எதிர்பாராத இறுதி வெற்றியும் முன்னைய தோனியும் ஒழுங்கான பதிவும்

ஒரு வேண்டுகோள் 

தேவையற்ற பிரயோசனம் இல்லாத பதிவுகளுக்கு மத்தியில் ஒரு பதிவரின் ஒழுங்கான மனிதாபிமான பதிவை அனைத்தையும் மாற்றக்கூடிய பதிவை  பார்த்தேன் . பிரபல பதிவர்கள் (சிலர் ) தம்மைத்தாமே புகழ்ந்து தள்ளிக்கொண்டும் மாறி மாறி பிரபலமும் தேடும் போது ஒரு நல்ல தேவையான பதிவு .
உங்களால் முடிந்த மாற்றத்தை ஊடகங்களில் ஏற்ப்படுத்துங்கள் .
செய்திகள் மக்களுக்கு வெளி வரவேண்டும்  .....

==================================================================================
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இக்கட்டான நிலையில் இருந்து மீண்டும் அரை இறுதிக்கும் நுழையும் வாய்ப்பு இந்த போட்டியை வெற்றி கொண்டால் கிடைக்கும் என இருந்தது. காரணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இடம் காணப்பட்ட சராசரி ஓட்ட விகிதம் . இவ்வாறு எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் இன்றைய போட்டியில் கிங்க்ஸ் லேவேன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டது . 54 ஆவது போட்டி தர்மசாலாவில் நடை பெற்றது .



நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார் . இன்று வழமைக்கு மாறாக மகேல ஜெயவர்தன  ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார் . காரணம் அண்மைய பெறுபேறுகளில் சிறந்து விளங்கியமை.  கிளாஸ் பிளேயரின் அதிரடி தான் சந்தித்த முதல் 8 பந்துகளிலும் 21 ஓட்டங்களை( 2 சிக்சர்கள்  ) பெற்றார் . மர்ஷும் சங்கக்காரவும் பலமான அடித்தளத்தை பத்து ஓவர்கள் வரை கொண்டு சென்றனர் . சங்கக்காரவின் ஆட்டமிழப்பிட்க்கு  பின் வந்த யுவராஜ் சிங்கும்(1 ஓட்டம் )  ஆட்டமிழந்து செல்ல வந்த இர்பான் பதான் மார்ஷுடன் ஜோடி சேர்ந்து பலமாக அடித்தாடினர்.  மார்ஸ் 88 ஓட்டங்களும் , பதான் 44 ஓட்டங்களையும் பெற்று இறுதி  வரை ஆட்டமிழக்காது (இணைப்பாட்டம் 99 )ஆடினர்.   பந்து வீச்சில் இன்று போலிங்கேறும் பிரகாசிக்கவில்லை . மார்ஷின் சிறப்பான அதிரடி துடுப்பாட்டம் பஞ்சாப் அணியை 192 /3 என்ற உயரிய ஓட்ட இலக்கை அடைய வைத்தனர் .



கூடிய இலக்கு ஆகையால் வெற்றி பெற்றால் சராசரி ஓட்ட எண்ணிக்கையும் கூடும் என இருந்தது .192 என்ற இலக்கை வைத்து வழமை போல ஹெய்டன் விஜயோடு ஆரம்பித்த சென்னை அணி . ஆரம்ப ஓவரிலேயே ஒரு ஓட்டத்தையே  பெற்றது . ஹைடனின் வழமையான மோசமான துடுப்பெடுத்தாட்டத்தை இங்கும் காணமுடிந்தது . 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் .   அடுத்ததாக இறங்கிய ரைனா ( இறுதியில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட பட்டியலில் இடம் பெற்று விட்டார் ). தனது காலை உபயோகித்து அருமையான துடுப்பாட்டத்தை பிரயோகித்து வரும் ராயினா பியுவர் (தூய ) கிளாஸ் ஷொட்களை அடிப்பதை காண முடிகிறது . நம்பிக்கையான போர்மில் இருந்த ராயினா(46  ஓட்டங்கள்  )அணியை மீண்டும் வெற்றிக்கு பத்ரினாத்துடன்(53 )(நீண்ட கால இடைவெளிக்கு பின்னான அதிரடி ) இணைந்து பலமான நிலைக்கு இட்டுச்சென்றனர் . 

ராயினா ஆட்டமிழக்க ஆடுகளத்துக்கு வந்த டோனி யை பார்த்ததும் வழமை போல இந்த போட்டியிலும்  சறுக்கல் என நினைத்து தோனியை கவனிக்கவில்லை . ஆரம்பத்தில் இருந்தே மெதுவாக ஆடிய டோனி இறுதியில் பழைய தோனியை காட்டி  சென்னையை அதிரடியாக வெற்றி பெற செய்தார் . 
இறுதி ஓவரில் கூட 6 பந்துகளில் 19 ஓட்டங்கள் பெறவேண்டி இருந்தது . இந்த தோல்வியும்  தோனியின் மெதுவான ஆட்டத்தால் இடம் பெரும் என்று எண்ணத்தோன்றியது . ஆனால் இறுதியில் ஒரு 4 ஓட்டம் 2  சிக்செர்கள் அடங்கலாக இரு பந்துகள் மிகுதி இருக்க போட்டியை (195 /4 )வென்றார் டோனி . 

போட்டிக்கு வந்த தல்யிலாமா 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது . (+o .27 ) என்ற ஓட்ட விகிதத்துடன் அரை இறுதி போட்டிகளுக்குள் இடம் பிடித்தது சென்னை . 

ஆட்ட நாயகனாக எம் எஸ் டோனி தெரிவு .


ஒரு வேண்டுகோள் 

தேவையற்ற பிரயோசனம் இல்லாத பதிவுகளுக்கு மத்தியில் ஒரு பதிவரின் ஒழுங்கான மனிதாபிமான பதிவை அனைத்தையும் மாற்றக்கூடிய பதிவை  பார்த்தேன் . பிரபல பதிவர்கள் (சிலர் ) தம்மைத்தாமே புகழ்ந்து தள்ளிக்கொண்டும் மாறி மாறி பிரபலமும் தேடும் போது ஒரு நல்ல தேவையான பதிவு .
உங்களால் முடிந்த மாற்றத்தை ஊடகங்களில் ஏற்ப்படுத்துங்கள் .
செய்திகள் மக்களுக்கு வெளி வரவேண்டும்  ..... 

Friday, April 16, 2010

தமிழன் - வரலாறு - வரலாற்றை அறியாதவன் இனம் நிச்சயம் அழியும்

ஒரு சமூக போராட்டமோ ஒரு இனத்தின் போராட்டமோ மழுங்கடிக்கப்படுவது அவ்வினத்தினரிடையே காணப்படும் அறியாமையால் . வரலாறு இதற்க்கான விடைகளை படைக்கிறது . தனது  சமூகத்தின்/இனத்தின்  வரலாற்றை அறியாதவன் சமூகம் நிச்சயம் சிதையும் . 

இதில் எந்த போராட்டம் சரி என்பதோ அல்லது எதையுமோ ஆதரித்து எழுதவில்லை . இருந்த வரலாற்றை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கிறேன் .

வீரம் விளைந்த மண்ணின் மன்னன் பண்டார வன்னியன் பற்றி விரிவாக அறிந்தால் தமிழர் பூமி , அவர்களுக்கு தனியொரு உரிமைகளுடனான இடம் இலங்கையில் இருந்தமைக்கான ஆவணங்கள்  கிடைக்கும் .


மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னரை தளபதியாகவும் வைத்திருந்தான். அதே நேரம் காக்கை வன்னியன் எனும் மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .

ஒல்லாந்தர்  எமது நாட்டை கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி இங்கு இவ்வாறு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு  ஏடுகளில் காணலாம் . முக்கியமாக மேலைத்தேயர்கள் இலங்கையை கைப்பற்ற காரணம் கடல் வளங்களும் , வணிகமும் , மண் வளங்களையும் பார்த்து மோகம் கொண்டதே . முக்கியமாக இயற்க்கை வளம் கொண்ட திருகோணமலை துறைமுகம்(ஆசியக்கண்டத்தின் திறவுகோல் ) பிரச்சனைகளின்  அடிப்படை எனலாம் . இவற்றுள் மாதோட்டம் துறைமுகமும் ஒன்று .

புவியியலாளர் தொலமி (உலக  வரைபடத்தை முதன் முதலாக வரைந்தவர் ) இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி  தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ இருந்ததமைக்கான சான்று  இல்லை . 



இது இவ்வாறு இருக்க மற்றைய பேரரசுகள் பல திருகோணமலைக்கு  ஆக  போரிட்டு மடிந்து போயின . கண்டிய மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும்  இடையில்  சண்டை நடந்தது . அந்த நேரத்தில் மாபெரும் மன்னனாக இருந்த ஆங்கிலேயன் ராபர்ட் நொக்ஸ் கண்டிய மன்னனால் மூதூரில் (தற்ப்போது ) வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் நொக்ஸ் ஒருவாறு சிறையில் இருந்து தப்பி அனுராதபுரப்பக்கமாக ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன்  அங்குள்ள  மக்களையும்   ஆட்ச்சியையும் பார்த்து வியப்படைந்தான் . ஆட்சி  செய்த மன்னன் கைலாய வன்னியன் .  

மாவீரன் குலசேகரம் வைரமுத்து  பண்டார வன்னியனுக்கு நடந்தது என்ன ? 


கண்டிய அரசனுக்கு  கீழ்ப்படியாது  ஆங்கிலேயருக்கு திரை வரி செலுத்தாது ஆட்சி செலுத்தி   வந்தவன் தான் மாவீரன் பண்டாரவன்னியன் . வழமை போல தமிழன் இடம் ஊறியுள்ள துரோகத்தன்மையை காட்டிய வரலாறு . வீரபாண்டிய  கட்டபொம்மன் போல ஒரு வரலாறு இங்கும் உண்டு . 

பண்டாரவன்னியனுக்கு சகோதர்கள் ( கைலாய வன்னியன் , பெரிய மைனர் ) இருக்க சகோதரி நளாயினியும் இருந்தாள். நளாயினி தமது அவை புலவர் மீது காதல் கொண்டிருந்தாள் . மன்னன் காக்கை வன்னியன் ( இன்னொரு நிலப்பகுதி மன்னன் ) நளாயினி மீது காதல் கொண்டு எவளவோ கடிதங்களை பண்டாரவன்னியனுக்கு அனுப்பியிருந்தான் . பண்டாரவன்னியன் அதற்க்கு ஒன்றும் கூறவில்லை . இவ்வாறிருக்க புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் புலவருடன் போரிட்டான் . புலவர் மன்னனை வாளால் வென்று திருப்பி அனுப்பினான் . புலவனும் அரச குலத்தில் வந்ததை உணர்ந்த மன்னன் தனது சகோதரி காதலுக்கு சம்மதித்தான் .

இதை  மனதில் இருந்த்திக்கொண்டு இருந்த காக்கை வன்னியன் வெள்ளையர்கள் பண்டாரவன்னியன் மீது படை எடுத்து தோல்வி அடைவதை   உணர்ந்தான் . வெள்ளையர்களுடன்  சேர்ந்து சதி செய்து மன்னனை கொல்ல திட்டமிட்டான் . வழமை போல பாசாங்கு செய்து மன்னனிடம் மன்னிப்பு கேட்டு  தருணம் பார்த்து  ஆங்கிலேய படைகளிடம் சிக்க வைத்தான் 

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை . 

பலமுறை படை எடுத்தும்  வெல்லப்படமுடியாத அவனை நிறைவில் ஆங்கிலேய தளபதி  ஆனையிறவு திருகோணமலை என மும்முனையிலும் இருந்து படை எடுத்து வந்து வென்றனர். இவ்வாறு வெல்லப்பட்ட அவனுக்கு ஆங்கிலேய தளபதியலேயே சிலை வைக்கப்பட்டது . 


1803/10/31 காலப் பகுதியில் அப்போது ஒட்டுசுட்டான் பகுதியாகவிருந்த  தற்போதைய கற்சிலைமடுப்பகுதியில் ஆங்கிலேயப் படைத்தளபதி கப்டன் "றிபேக்"என்பவனால் தோற்கடித்து கொலை செய்யப்பட்டார்.

இப்பொழுதும் கூட பண்டாரவன்னியனுக்காக அவரை கொலை செய்த ஆங்கிலேயராலேயே  வைக்கப்பட்ட நினைவு கல்  உள்ளது . சிலர் தற்ப்போது உடைத்து விட்டனர் . இலங்கை அரசே பண்டாரவன்னியனை தேசிய  வீரனாக அறிவித்துள்ள் நிலையில் சிலர்  செய்துள்ள வேலை ஆத்திரமூட்டுகிறது .


ராபர் நொக்ஸ்  குறிப்பேட்டில் தான் வடக்காக  தப்பிச்சென்ற போது வயல்வெளிகளையும் எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சின்ஹல மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சின்ஹல மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் . 

மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்ச்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்க்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாக அவரது  குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் .  
 
இதிலிருந்து காலம் காலமாக தமிழர் வாழ்ந்த பூமி. தமிழர் நாடு எதுவென தெளிவாக காணக்கூடியதாக  உள்ளது . இல்லாத ஒன்றை எவனும் கேட்கப்போவதில்லை .  


Monday, April 12, 2010

சானியா மிர்சா ....

கொஞ்ச காலமாவே சீரியஸா சொல்லும் தத்துவங்கள் சிலரிடம் எடுபடுவதில்லை . சொன்னா பெரிசு காலங்காத்தாலேயே ஆரம்பிச்சிடுச்சு எண்டு கடுப்பு தான் வரும். இதிலையும் சிலதுகள் கவிதைங்கிற பெயர்ல பண்ணுற கொடுமை இருக்கே . என்ன தான் சொன்னாலும் " மொக்கை கவிதையா இருந்தாலும் அதை சக்கை பிகருக்காக தான் எழுதணும் ".

=========================================================================
பார்த்த ஒரு காதல் கவிதை . ஐந்தறிவு ஜீவன் ( பகுத்தறிவு இல்லாதது எழுதினது போல இருக்கு ) ஒன்று எழுதிய கவிதை .

நீ கொடுத்த 
புத்தகத்தில்
முதல் பக்கத்திலேயே
படித்தேன்
ஒரு கவிதையை.
பிறகுதான்
சொன்னார்கள்
அது உன் பெயர் என்று.

அவ் வ் ... நீங்க நினைக்கிறது புரியுது . கொன்றோல் பண்ணுங்க பாஸ்.

இதிலை கொடுமையிலும் கொடுமை என்னன்னா . ராத்திரீல வார மெசேஜ் . நட்பு எண்ட பெயர்ல பண்ணுற ரோதனை . ஏதாவது பிரச்சனைன்ன ஆள் பக்கத்திலையே இருக்க மாட்டான் . ஆனா மெசேஜ் மட்டும் வரும் . "பிரெண்ட்ஸ் ஆர் லைக் ஸ்டார்ஸ் " அது இதுன்னு . இப்பிடி அடிக்கடி அனுப்பினா நட்பாமாம் ..
  
குமுறி  குமுறி அழுத கவிதை . கொன்றோல் பண்ண முடியேல்லையே ....சபா ...
ஜூலியர் சீசரையே முன்தீடுவானுங்க போல இருக்கு .

இனிய நண்பா... உன்
பெயரைக் கூட நான்
எழுதுவதில்லை..
பேனாவின் கூர்மை
உன்னைக்
குத்திடுமோ என்று......! 

=========================================================================

இந்த வார தத்துவம் ....
இதுக்கு விளக்கம் டி ஆர் ட கேட்டு  தெரிஞ்சுகொங்கோ .

"'பீடி'யால் சுட்டபுண் உள்ளாறும்

ஆறாதே.. 'லேடி'யால் கெட்ட மனம்...

==============================================================================================

ரொம்ப சிரிக்க....
கொஞ்சம் சிந்திக்க ... 
சுடாதது நிறைய ...
சுட்டது கொஞ்சம் ..




"ஓசீல அயன் பாக்ஸ்  கிடைத்தால் Under wear  ஜயும் அயன் பண்ணி போடுவாங்களாம்"

"சிட்டிக்கு வந்த சிங்கார எலி conference கால் ல family ப்ளான் போட்டிச்சாம்" .

" பூனைக்கு காசு இருந்தா , "புவனேஸ்வரிக்கு  கோல் பண்ணும்?"

"அம்மணமா ஓடிச்சாம் புலி... underware குடுத்திச்சாம் எலி"

'சிலுக்கா இருந்தாலும் சில்லறை இல்லன்ன சிங்கி அடிக்க வேண்டியது தான் "

"சிங்கி அடிக்கிறவனுக்கு போன் கிடைச்சா சிம் இல்லாமையே சிம்ரனோட பேசுவானாம்"

"சுரணை இல்லாதவனுக்கு சுனைனா கேக்குதாம்"

"கழுதைக்கு காலம் வந்த கடவுளுக்கே கலர்ஸ் காட்டுமாம்"

"குளுகுளுப்பா இருந்தா குருக்களும்  குறுமா கேப்பாராம்" .

"தடுக்கி விழுந்தாலும் தமன்னான்னா தப்பில்லை" 

"நித்தியானந்தாக்கு  நிம்மதி  இல்லைன்னா நிலவுக்கு ஆசைப்படலாமா ?

பாம்புக்கு காலம்  வந்தா பாவனாவை வைச்சு படம் எடுக்குமாம் .

"ஓசீல தின்னுறவனுக்கு திரிஷா கேக்குதாம்"

" சாணிய மிரிச்சா சானியா மிர்சா கதி தான் "


=========================================================================
சின்ன அறிவுரை 


"உன்னை காதலிக்கும் பிகரை  நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக அது சப்ப பிகராகத்தான் இருக்கும்.."


சினிமா பஞ்ச் (பஞ்சில் சந்தேகம் )


"ஒரு வாட்டி முடிவு பண்ணீட்டா  என் பேச்சை நானே கேக்க மாட்டன் ".
உங்க பேச்சை நீங்களே கேக்காட்டி அடுத்தவங்க எப்பிடி கேப்பாங்க பாஸ் ??

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிரவும் ..

Saturday, April 10, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் - தொடர்பதிவு (பகுதி 3 )

முன்னைய பதிவுகளில் இந்து சமயம் லவுகீக வாழ்க்கையின் ஒரு வழிகாட்டி மதமாக அமைந்துள்ளது  என்ற  பார்வையின் அடிப்படையில் கருத்துக்களை வழங்கியிருந்தேன் .

முன்னைய பதிவிற்க்கு :- Click here

இந்து சமயத்தை ஒரு மதமாக மற்றவர்கள் ஒப்புவித்தது போல பார்ப்பவன் மதம் மாறுகிறான் , மிகையாக விளங்கி விட்டது என்று எண்ணுபவன் தன்னுடைய சுய சிந்தனையை இழந்து விடுகிறான் . இந்து சமயத்தை அறிவியலுடன் பார்த்தால் , சரியாக காரணங்களுடன் விளங்கி கொண்டால் இது போல சிறந்த மதம் இல்லை எனலாம் .

வழி காட்டி மதம் , அறிவியலுடன் இணைந்த மதம் என்ற வகையில் பார்ப்போம் . அறிவியலை இழிவு படுத்தாத ஒரே மதம் . சிலர் உலகம் உருண்டை என சொன்ன போது ஏற்றுக்கொள்ளவில்லை . சிலர் இப்போது பிரபஞ்ச தோற்றமே ஒருவனே நடத்துகிறான் . எல்லாவற்றையும் கண்டு பிடித்த பின்னர் விளக்கம் சொல்லுகின்றனர் . சிலர் பரப்புரைகாக மதம் மாறி அதை பேட்டி வேறு கொடுக்கிறார்கள் .



லவுகீக வாழ்க்கையை விளக்கும் அடிப்படையாக எமது புராணங்கள் , இதிகாசங்கள் அமைந்தது என்றால் அது  மறுக்கமுடியாத உண்மை . புராணங்களில் வரும் சில கதைகள் சாத்தியமா ? ராவவனனுக்கு  60 ,000 மனைவியர் என்பது சாத்தியமா ? எனவும் மற்றைய சில கேள்விகளும் எழலாம் .

எவ்வாறு சில காரியங்கள் கதைகளுக்கு வரலாறு உண்டோ அதே போலவே வரலாறுகளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது . முன்னர் எல்லாம் அச்சு முறை என்ற முறை  இருக்கவில்லை . ஆகவே வரலாறுகள் நாம் பல காலங்களாக செவி வழியே கேட்டு வந்தது தான் . ஆகவே சிலவை திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் .

ராமாயணத்தை எடுத்துக்கொண்டால் ராமன் ஒரு மனைவி (ஏகபத்தினி விரதம்) கொண்டவன் . அதற்க்கு எதிர் மாறாக ராவணனை சித்தரித்தார்கள் . பல பெண்கள் மீது ஆசை கொள்பவன் வாழ்க்கை எவ்வாறு ? ஏகபத்தினி விரதம் கொண்ட ராமனின் வாழ்க்கை எவ்வாறு ? என்பதை இருவரையும் இரு  வேறு துருவங்களாக சித்தரித்திருந்தனர் .  சரியானதை தெரிவு செய்வது எமது கடமை .


இந்து மதத்தை சரியாக விளங்காதவர்கள் இந்து மதம் ஒரு சந்நியாச மதம் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். ஏன் நம் இளைஞர்கள்  நினைப்பதும் அவ்வாறே. ஆனால் இந்து மதமோ அதன்சரித்திரத்தில்  குறிப்பிடுவது லவுகீக(குடும்ப)  வாழ்க்கை  , காதல் கதையாக இருக்கும் . வாழ்க்கையில் நடக்கும் இந்த விடயங்கள் கண்ணன் வாழ்க்கையிலும்  சரி(கண்ணன் ராதை ) , ராமன் வாழ்க்கையிலும்  சரி (ராமன் சீதா ) நாம் கேள்விப்பட்டவையே .  வேறு எந்த மத புராணமோ எந்த வரலாறுமோ இறைவனின்  காதலை கூறியதில்லை . நம் அன்றாட உணர்வுகள் வாழ்க்கையோடு அமையவில்லை . இந்து சமயம் மாத்திரமே வழிகாட்டுகிறது .

பெண்களையும் பிரதானமாக கொண்டு பெண்களுக்கும் இதிகாசங்களிலும் சரி புராணங்களிலும்  சரி  சமனான இடம் கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம் .



இந்துசமயத்தில் எவ்வாறு வாழ விரும்புவனுக்கும் வழி உள்ளது . வாழ்க்கையை வெறுத்தவனுக்கும் வழி உள்ளது , வாழ நினைப்பவனுக்கும் வழி உள்ளது . தற்ப்போது எமது மக்கள் முழுமையாக இந்து மதத்தை விளங்கா விட்டாலும் (மத மாற்றம் ).  ஆங்கிலத்தில் மொழி மாற்றி கூறும் போது  அதனை மேலைத்தேய மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவில் இந்துக்கள் விகிதம் அதிகரிப்பதாக கருத்து கணிப்பு ஒன்று கூறகிறது .

நம்மை சுற்றி அமைந்த இந்து சமயம் அனைவரும் கண்ணால் காணும் ஐம்பூதங்களின் அடிப்படையில் அமைந்து உள்ளது . சரி இறைவனே இல்லை எதுவுமே இல்லைஎன்பவன் ஐம்பூதங்களின் சக்தியை கட்டாயம் மதித்தே  ஆவான் .

இந்து சமயத்தில் ஒரு குறையாக அனைவருக்கும் தெரியாமல் இந்து சயத்தில் செய்யப்படும் சடங்குகள் , முறைகள் . அதை தெரியாமல் மிகைப்படுத்தி சிந்திக்கும் போது செய்யும் போது வெளியில் இருப்பவர்களுக்கு நகைப்பாகவும் மூட நம்பிக்கை எனவும் எண்ணத்தோன்றும் .

எவ்வாறு மேல கூறிய அனைத்திற்க்கும் காரணம் விளக்கங்கள் உண்டோ  அதே போல இவற்றிட்க்கும்  விளக்கம் உண்டு . அதனை அடுத்த பதிவில் பார்க்கலாம் .

யாரவது அறிவியலுடன் இதிகாசங்களை அல்லது இந்து மதத்தை தொடர்பு படுத்தி தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் 

Thursday, April 8, 2010

இளையராஜா - ஒரு தொடர் பார்வை

இளையராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு புகழ் . பத்மபூஷன விருது கிடைக்கப்பெற்றது .  ஒஸ்கார் விருது ரகுமானுக்கு கிடைக்கப்பெற்றதும் தெரிந்ததே . இருவரும் தமிழ் சினிமா இசையின் ராஜாக்கள் . நவீன இளையராஜா தான் ரகுமான் எனலாம் . இந்திய  ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கையால் கிடைக்கப்பெற்றது .




இளையராஜா மீதான பார்வையை தொடர்ந்து பார்க்கலாம் என இடும் பதிவு . இளையராஜா பற்றிய 5 ஆவது பதிவு .முன்னைய பதிவுகளை  வாசிக்க :-
Click here

வழமையை போலவே இளையராஜாவின் சிறப்பான பாடல்களை ரசனைகளுடன் தகவல்களுடன்  பகிரலாம் என நினைக்கிறேன் .


இளையராஜா மேலைத்தேய  இசையை கலந்து  கொடுத்ததால் அவருடைய மெலடியில் ரசனையோ இனிமையோ குன்றவில்லை . அவ்வாறான ஒரு பாடல் தான் இது . "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" அருமையான மெலடி. மிக மிக பிடித்த பாடலும் கூட .


Click here to listen 


பந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல்( waltz பீட்) . நினைவெல்லாம்  நித்தியா படப்பாடல் . வயலின் இசையால் பின்னணியில் அமைந்திருக்கும் . பாலசுப்ரமணித்தையும் ஜானகியையும் அருமையாக பாவித்திருப்பார்  இளையராஜா .


"இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை!
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை!" 



தொடக்கம் முதல் இறுதி வரை உணர்வால் தொடும் பாடல்


இந்த வரிகள் பாடிய விதமும் வைரமுத்துவின்  வைர வரிகளும் அருமையிலும் அருமை . பின்னணியில்  தனியான ஹம்மிங் சேர்த்திருப்பார் . இளையராஜாக்கு முக்கிய மயில் கல்லாக அமைந்த பாடல் .




=====================================================================
முன்னர் இளையராஜாவால் ஓடிய படங்கள் எத்தனையோ . இளையராஜாவை தமது படத்தில் சென்டிமெண்டாக முதல் பாடல் பாட வைத்தவர்கள் பலர் . இளையராஜா  முதல் பாடல் பாடினால் படம் ஹிட் .


மற்றுமொரு அருமையானா வயலின் கையாளல் கமலின் ராஜபார்வை படத்தில் பின்னணி இசையில் பண்ணியிருப்பார் இளையராஜா .  வயலினுடன் பல இசைக்கருவிகளையும் துணைக்கு அழைத்திருப்பார் . புல்லாங்குழல் , தபேல இசைகள் வயலினுடன் இணையும் இடங்கள் அருமை . 


Click here to listen

இளயராஜாவின் சில பாடல்கள் சோலோவாகா இசை இல்லாமலும் பாடினால் இனிமையாக இருக்கும் . "இளமை எனும் பூங்காற்றை" குறிப்பிடலாம் . இந்த பாட்டில் வரிகள் கண்ணதாசனின் வரிகள் . ஆனால் கூடுதலாக கண்ணதாசன் இளையராஜாவுக்கு எழுதவில்லை . ஆனால் எழுதிய அனைத்தும் ஹிட் .




இளையராஜா எந்த வெளி நாட்டு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பாடும் பாட்டு " சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டை போல வருமா " . இந்த பாட்டை கேட்டாலே தாய் மண்ணின் பெருமை விளங்கும் . வரிகளுக்காக கேக்கலாம் .


இளையராஜாவுக்கு வைரமுத்துவின் வைர வரிகள் உதவியாக இருந்தது . வைரமுத்து பாடலை கவிதை என்ற முறையில் இருந்து விலக்கி கொண்டு சென்றார் . அதுவரை இருந்து பாடல்கள் ட்ரெண்டை வைரமுத்து மாற்றினார் . 


=========================================================================


நினைவுகளையும் எண்ணங்களையும் வருடும் இளையராஜாவின் இன்னொரு பாடல் தான் தென்றலே என்னை தொடு படத்தில் இடம் பெற்ற "தென்றல் வந்து என்னை தொடும் ஆகா சத்தம் இன்றி  முத்தம் இடும் "  பாடல் . இந்த பாடலை கேட்டு விட்டு பாருங்கள் மனதில் ஒரு தாக்கம் இருக்கும் . ஒரு நிறைவை காணலாம் . ஜேசுதாசின் காந்த குரல் , ஜானகியும் குரலுடன் இணைந்த பாடல் . இயற்க்கையுடன் காதலை இணைத்த பாடல் வரிகள் . 


Click here to listen


2 .40 நிமிடங்களில் புல்லாங்குழல் உடன்    ஹம்மிங் அருமை .   "தூறல் போடும் இந்நேரம் தொழில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் ", தெரிந்த பிறகு திரைகள் எதற்க்கு வரிகள் ஜேசுதாசின்  குரலில் கணீரென ஒலிக்கும் .  


இளையராஜா மெலடிக்கு மட்டும் அல்ல , வெறும் வார்த்தைகளை வைத்தே ஓரம் போ, ஓரம் போ பாடலை அமைத்திருப்பார் . நகைச்சுவையை அறியாமலேயே மனதில் கொண்டு வரும் இசையை அமைத்திருப்பார் . 


மேலும் பல எளிமையான சந்தோஷமான பாடல்களையும் நகைச்சுவையான பாடல்களும் இளையராஜாவின் வண்ணத்தால் உருவானது . ராப் இசை முறையையும் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது . அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம் . 

ஏன் ?