தொடருபவர்கள் - நன்றிகள்

Saturday, May 29, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்

அர்த்தமுள்ள இந்துமதம் எனும் கண்ணதாசன் தலைப்பில் எனது பார்வையை செலுத்தி வருகிறேன் . இந்து மதம் அடிப்படையிலேயே வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், அனைவருக்கும்  பொதுவான ஆதி மதம் என்பது என்னுடைய கருத்து . சரியான பாதையில் வழி நடத்தி செல்ல இருந்த இந்து சமயம் சாதிகள் , சரியாக விளங்கி கொள்ளாமை போன்றவற்றால் பிழையாக செல்கிறது .

எனது பழைய பதிவுகள் ஒரு தொடராக - மூன்றாம்  பகுதி    அதில் முதல் இரண்டு பகுதிகளுக்கு லிங்க் உள்ளது . தொடரை வெற்றியாக்கும் உங்களுக்கு நன்றிகள் ...
=========================================================================
இந்து சமயத்தின் ஒவ்வொரு செயல்ப்பாட்டுக்கும் காரணங்கள்  உண்டு . சிலவை மிகைப்படுத்தப்பட்டவை . காரணம் பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் தோன்றிய சமயம் வெறும் வாய் வழியாகவே பரிமாறப்பட்டு வருகிறது . வாய் வழியாக வரும் போது திரிபுபடுத்தப்படுவது இயல்பு .

பாம்பை கொன்றால் பிழையா ? பாம்பு தெய்வமா ? பாம்புக்கு எதுக்கு முட்டையும் பாலும் அதை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கலாமே ? பாம்பு கனவு ?என கிண்டல் அடிப்பதும் உண்டு .

முக்கியமாக பாம்பு கனவுகள் 
1 > ஒரு பாம்பு உங்கள் கனவில் அடிக்கடி வந்தால் என்ன என்பதை அறிவியல் அழகாக விளக்குகிறது . சாதாரண மனோதத்துவ நிலை தான் அது . உங்கள் குடும்பத்தில் அல்லது சுற்றத்தில் நீங்களா விரும்பிய ஒரு உயிர் இறக்க போகின்றதென்றால் அல்லது இறந்திருந்தால்  கட்டாயம் அந்த கனவு வரும் . ஒரு வித பயத்தின் இழப்பின் வெளிப்பாடு அது .

2 > சிலர் பாம்பு துரத்தி கடிப்பதும் ஆனால் எழுந்தவுடன் உயிருடன் இருப்பது போலவும் உணருவார்கள் . அப்படியானால் எங்கள் வாழ்க்கையில்  நாங்கள் எண்ணும் அளவுக்கு விடயம் ஒன்றும் சீரியஸாக இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் இந்த குறியீட்டில் தான் பிரதிப்பலிக்கப்பட்டன . காரணம் பாம்புக்கு மட்டுமே எல்லோரும் பயந்தது, பயப்படுவது .

முதலில் பாம்பை பற்றியும் கொஞ்சம் அறிவியல் தகவலை தந்து விட்டு மேலுள்ள காரணத்தை விளக்குகிறேன் . இதற்கும் இந்து சமயத்துக்கும் என்ன சம்மந்தம் என விளக்குகிறேன் .

ஒரு பாம்பு மனிதனையே விளங்கும் அளவுக்கு வாய் பகுதி பெரிதா என நினைக்கலாம் . ஆனால் அது 150 டிகிரி வரை வாயை நன்றாக விரிக்கும் . எங்களால் 90 டிகிரி கூட போக முடியாது .



ஐந்து  தலை நாகம் இந்து சமய கதைகளில் வந்ததே உண்மையா ?  கூர்ப்பு கொள்கை அதில் செயல்ப்பட்டிருக்கலாம் . 130 மில்லியன் வருடங்களுக்கு முதல் தோன்றிய உயிரினம் பாம்பு . பினைப்புகளாலேயே உயிரினங்கள் யதார்த்தமாக தோன்றியது உண்மை . அதில் ஐந்து தலைகளுடன் தோன்றி இருக்கலாம். மற்றைய தலைகளின் தேவை இருந்திருக்காது . அதனால் காலப்போக்கில் அழிந்திருக்கலாம் .

பாம்பின் அசைவுகள் (நகர்வுகள் )


பாம்பிற்கு காதுகள் இல்லை .பிறகெப்படி மகுடி ஊதும் சத்தம் கேட்க்கும் ?
பாம்பிற்கு காதுகள் இல்லாவிட்டாலும் அவற்றால் ஒலி அதிர்வுகளை செவி மடுக்க முடியும் . நாம் ஏற்ப்படுத்தும் ஒலி அதிர்வுகள் அவற்றில் உடலில் பட்டு தோலினூடாக ஊடுகடத்தப்பட்டு மூளைக்கு ஒலியையும் எச்சரிக்கையையும் விடுக்கிறது . காதின் தொழிலை செய்யும் உள்ளுறுப்பு (சென்சார் ) உண்டு . மகுடியிலிருந்து வரும் ஒலி அதிர்வுகள் வித்தியாசமானவை. அவை பாம்பிற்கு உண்மையில் மயக்கத்தை ஏற்ப்படுத்தும் . எப்படி தான் நம் முன்னோர்கள் கண்டு பிடித்தார்களோ ?

சரி பாம்பிற்கு பால் ஊத்துவதன் முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. அப்புறம் எதுக்கு புற்றுக்குள் ஊற்றினார்கள்  ?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம்  அடர்ந்த காடுகள்.  ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை . அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள் .ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை  கட்டுப்படுத்த முயன்றனர் .

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில்  இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு தேடி வரும் . 

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது .

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள் . அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது .

பாவம் அதால ருசியும் உணர முடியாது விட்டிருங்க. சிலர்  கட்டாயப்படுத்தி தான் பால் ஊற்றுகின்றனர். அவற்றிற்க்கு பால் பிடிப்பதில்லை . ஊர்வன வகை அவை . முளையூட்டிகள் பாலை குடிக்காது .


முக்கியமா இந்த ராமராஜன் படத்தில் எல்லாம் காட்டுவது போல பாம்பு பால் குடிக்காது . பக்தி படங்கள் எடுப்பவர்கள் காரணமும் சொன்னால் நன்றாக இருக்கும் . கிராபிக்ஸ் மட்டும்  காட்டாமல் .

நம்மவர்கள் செய்த பலவற்றிட்க்கும் காரணங்கள் உண்டு . அதை விளங்கினால் இந்துமதம் அர்த்தமுள்ளதாகும் .. தொடருவேன் .....

பிடித்திருந்தா மறக்காமல் ஓட்டு  போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும்

Thursday, May 27, 2010

கண் விளையாட்டு- மாயை-மனத்தோற்றம்-தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எம்மை பல்வேறு கோணங்களில் இட்டுச்செல்கிறது என்பது நாம் வாழும் , பார்க்கும் உண்மையான உலகத்தில் நடக்கும் உண்மை . அதென்ன உண்மையான உலகம் ? அங்கு தானே நாம் இருக்கிறோம் என கேள்வி எழலாம் . நாம் பார்க்கும் பொருட்கள் எதுவும் நாம் பார்ப்பது போல இல்லை என்கிறது ஒரு தரப்பு மற்றொரு பிரிவு நாம் உண்மையான உலகில் தான் வாழ்கிறோம் என்கின்றனர் . விவாதம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது .

கண்ணை நம்பாதே ,எல்லாம் மாயை , மனப்பிரமை , மாயத்தோற்றம் என்று பல அறிஞர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம் . எதையும் முழுதாக சொல்லாதவர்கள் நம்மவர்கள் என்று சொல்லலாம். ஆனால் நாம் வாழும் உலகம் மாயத்தோற்றம்(Illusion and Hallucination ) உடையதா ? நாம் பார்க்கும் பொருட்கள் ஒன்றும் நாம் பார்ப்பது போல இல்லையா ?

நாம் நினைக்கும் நாம் வாழும் உலகம் என்பது எமது தொடுகை உணர்வு , பார்வை , நுகருதல் , சுவைத்தல் என்பன எமது மூளைக்கு எடுத்து செல்லப்படுவதன் மூலம் உணர்ந்துகொள்கிறோம். அதை வைத்து மட்டுமே நாம் தீர்மானிக்கிறோம் நாம் நிஜத்தில் வாழ்கிறோம் என . நாம் பார்க்கும் பார்வை அப்படியே மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை . ஆனால் மூளையை , மனத்தோற்றத்தை இலகுவாக ஏமாற்றி விடலாம் என்பது நாம் பார்க்கும் உலகில் சாதாரணமாகநடக்கிறது . அது தான் இலகுவாக மஜிக்கிலும் நடக்கிறது .அப்படியென்றால் நாம் பார்ப்பது உண்மையாக இருக்கும் உலகின் பிரதிபலிப்பு மட்டும் தானா ?

எம்மனத்தோற்றத்தை மூளையை இலகுவாக ஏமாற்றலாம் . இதற்க்கு உதாரணம் கட்டாயத்தோற்றம் (forced perspective ). இது தான் தூரத்தில் இருக்கும் ஒருவர் கட்டையாக தெரிவார் அருகில் இருப்பவர் உயரமாக தெரிவார். சில நேரங்கள் இருக்கும் பொருட்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் .

மேலும் நம் உலகில் உள்ள சில கண்டுபிடிப்புகள் கண்களை ஏமாற்றலாம் என்பதற்கு சான்றாக இருக்கின்றன.


இதன் நடு புள்ளியை உற்று கவனித்தீர்கள் என்றால் சுற்றி இருக்கும் ஊதா புள்ளிகள் தெரியாது . மற்றும் உடனே கவனித்தால் பச்சை நிற புள்ளி அசைவது கண்ணுக்கு தெரியாது .

கீழே உள்ள வீடியோவை பெரிதாக்கி நடுப்புள்ளியை பாருங்கள் அதில் சொல்லப்படும் போது கண் பார்வையை வெளியே திருப்புங்கள். ( 1 நிமிடம் 40 செக்கன்கள் தான் )

http://www.youtube.com/watch?v=vzSRVgF501M&feature=related

கண்ணோடு மேலும் சில விளையாட்டுகள்

உண்மையில் இந்த கிறிஸ்டல் பந்து அசைகிறதா ? அந்த காமெராவை பிடிப்பவர் அசைகிறார் , ஸ்ட்ரிங் அசைகிறது . ஆனால் எமக்கு அந்த பந்து அசைவது போல தான் தோன்றும் .

video

4 நிறங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்த அட்டை ஒவ்வொரு படியாக கடுமையான நீல நிறமாகி கொண்டு செல்கிறது. ஆனால் பென்சிலை இடையில் வைக்கும் போது இரு நிறங்கள் ஒரே மாதிரி தெரியும் . இது ஒளியின் தெறிப்பை வைத்துசெய்யப்பட்டுள்ளது .

video

நவீன தொழில் நுட்ப்ப பார்வையில் விஞ்ஞானிகள் , கணணி வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டு வரும் இன்னொரு உலகத்தை காணலாம். அந்த உலகத்தில் நீங்கள் இந்த உலகில் செய்யமுடியாதவற்றை செய்து முடிக்கலாம் . இது கிட்டத்தட்ட அவதார் திரைப்படத்தில் நீங்கள் பார்த்த தொழில்நுட்ப்பத்திட்க்கு ஈடானது . உடலில் அனைத்து சென்சர்களும் பொருத்தப்பட்டு இருக்கும் .


இந்த உதாரணத்தை எடுத்தால் நாம் வாழும் உலகு எப்படி என்பதை உணரலாம் . தொழில்நுட்பம் உருவாக்கப்போகும் உலகும் உண்மையானது போன்றே தோன்றும் . காரணம் அங்கும் நாம் காணும் சூழல் எமது கண்ணுக்கு தெரியும் பொருட்கள் என்பவற்றிட்க்கு ஏற்ப்ப எம்மை பழக்கப்படுத்திக்கொள்ள போகின்றோம். நிச்சயமாக அதுவும் நமக்கு இன்னொரு உலகம் போல தான் தோன்றும் .

முக்கியமாக எமது கண்ணை வைத்து தொழில்நுட்பத்தை வைத்து பல நன்மைகளும் வந்துள்ளன . கூடுதலாக இந்த தொழிநுட்பத்தில் ஒருவரின் பயத்தை போக்க முடியும் .

உயரமான கட்டிடங்களில் இருந்து அவரை இருந்த இடத்தில் இருந்தே விழ வைப்பது போன்ற உணர்வை மூளைக்கு அனுப்பலாம் . இதன் மூலம் பயம் என்ற உணர்வை பலரிடமிருந்து போக்கலாம் .


இராணுவ பயிற்ச்சிகளை எந்த செலவின்றியும் வழங்கலாம் . இது அவர்கள் உண்மையில் காட்டுக்குள்ளேயே சென்று அந்த சூழலுக்கு ஏற்ப்ப ஒத்திசைந்து உண்மையாக சண்டையிடுவது போல சண்டையிடலாம் . அப்பாடா அதிலையே சண்டை பிடித்தால் இனி எங்களுக்கு நிம்மதி என நீங்கள் நினைப்பது புரிகிறது .எதிர்காலத்தில் வரவிருக்கிறது .


இருக்கு ஆனா இல்லை என்பது இனி வரும் தொழில்நுட்பங்களுக்கு போருந்தலாமோ என்னவோ ...


தகவல்கள் பிடித்திருந்தால் அனைவரயும் சென்றடைய மறக்காமல் ஓட்டளிக்கவும்

Wednesday, May 26, 2010

மரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம்

மனிதன் எந்த மர்மத்தை கண்டு பிடித்தாலும் இறந்த பின்னரான மர்மத்தை தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறான் . புரியாத பல புதிர்களையும்  கேள்விகளையும் , குழப்பங்களையும் சுமந்து நிற்கிறது . இந்த குழப்பங்களில் வாழ்கிறது கடவுள் நம்பிக்கை. விஞ்ஞானத்தால் எட்ட முடியாத இடம் அது , இருந்தாலும் அதனை அணுகும் முறையில் முன்னேறுகிறது மனோதத்துவமும் விஞ்ஞானமும்  . 

மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்கள் சிலர் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள் அதில் பலர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் . தமது கண்கள் மூடும் முன்னர் தமது வாழ்வு , தமது சூழல் அனைத்தும்   ஒளியால் நிரம்பி இருந்தது எனவும்  ஒரு வித அமைதி நிலை காணப்பட்டது எனவும் கூறியுள்ளனர் உயிர் பிழைத்து வந்தவர்கள். அமானுஷ்ய விடயங்கள் பல மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது நடைபெறும் .


மரணத்திற்கு அருகாமையில் சென்று வருவது என்றால் என்ன ? அது  என்ன அமானுஷ்யமா ? ஏதாவது சக்தியா ? அல்லது மூளையின் திடீர் மாற்றங்களா ? என பல கேள்விகள் எழுந்தாலும் விஞ்ஞானம், சமய நம்பிக்கை , அறிவியல் எனும் பார்வையில்  கொஞ்சம் பார்க்கலாம் என எண்ணுகிறேன் .

மரணத்திற்கு பின்னரான வாழ்க்கை பற்றி கிறிஸ்துவுக்கு  முன் வாழ்ந்த பிளாடோ என்பவர் தனது குறிப்பில் Er என்ற போர் வீரன் இறந்த போது தனது உயிர் (நாம் கூறுவது இவ்வாறே ) செல்வதை உணர்ந்து கூறியதை குறித்திருக்கிறார் . இது உண்மையா என பலரிடம் கேள்வி எழுந்தாலும் கூடுதலானோருக்கு அதே போன்ற ஒரே உணர்வு ஏற்பட்டிருக்கிறது  .

மரணத்தை அண்மிப்பவர்களின் உணர்வு

அமைதியான உணர்வு 

பதற்றமில்லாது அமைதியாக செயல்ப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் . அவர்களால் மட்டும் தாம் இறக்கப்போவது பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதை எப்படி விளங்கப்படுத்துவது  வெளிப்படுத்துவது  என அவர்களுக்கு தெரிந்திருக்காது . மரணத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இருப்பதை அது காட்டுகிறது. 

மிகவும் கூடுதலான வெளிச்சம் 

ஒரு வித ஒளி வந்து அவர்கள் சுற்றுப்புறம் அனைத்தையும் சூழும் . அவர்களின் ஆள் மனது இறைவனை அல்லது சொர்க்கத்தை காண்பது போல உணர்வை தோற்றுவிக்கும். 

உடலுக்கு வெளியே அனுபவம் 

தான் உடலை விட்டு வெளியேறுவது போல உணர்வு தோன்றும் . கிட்டத்தட்ட மிதப்பது போல . தன்னால் தனது உடலை பார்க்க முடியும் . சிலர் தாம் டாக்டர்கள் தம் உடலுக்கு சிகிச்சை செய்வதை  பார்த்ததாக கூறியுள்ளனர். பின்னர் எங்கோ பறந்து போவது போல உணர்வு தோன்றுமாம் .

இன்னொரு பரிமாணம் நோக்கி  செல்லல்    

சில வேளை அவர்கள் அவர்கள் மனதில் பதிந்த மத நம்பிக்கைகள் படி அல்லது உலக அனுபவங்கள் என்பன அவர்களை  அந்த அந்த பரிமாணங்கள்  நோக்கி இட்டுச்செல்லும் . ஒரு வேளை சொர்க்கத்திற்கும் சில வேளை நரகத்திற்கும். ஒரு வேளை வித்தியாசமான உலகமாக  இருக்கலாமோ .

உயிரின் தொடர் பயணம் 

ஒரு குகை போன்ற அமைப்பினூடு வெளிச்சமான பகுதியை நோக்கி செல்வது போல உணர்ந்திருக்கின்றனர் சிலர் . குகையினூடு செல்லும் போது பல விதமான தேவதைகள் , கடவுள் போல அவர்கள் மனதில் சித்தரிந்திருந்த உருவங்களை கண்டுள்ளனர் .


சக்திகளுடனான உரையாடல் 

அதனூடு பயணிக்கும் போது சில உரையாடல்களை கேட்டுள்ளனர் . பெரிய ஆண் குரலில் இது உங்களுக்கான நேரமில்லைமீண்டும் திரும்பி செல்லுங்கள் என்றெல்லாம் கட்டளை வந்திருக்கிறது . அது இறைவன் குரல் என நம்புகின்றனர் .

வாழ்க்கை மீதான மீள் பார்வை 
சிலர் இறந்த பின்னர் தமது வாழ்க்கை மீண்டும் தொடக்கத்திற்கு செல்வது போல உணர்வர் . கிட்டத்தட்ட பிளாஷ் பக் போல ஒன்று ஓடும்.


இது சிலர்  கண்டு வந்தவை ஆனால் இன்னொருவர் தாம் இந்த உலகை விட்டே வெளியேறுவது போலவும் அந்த உணர்வு  மிகவும் மகிழ்ச்சியானது எனவும் கூறியிருந்தார் . அந்த ஒளிக்குள்ளே செல்ல வேண்டும் என்ற உணர்வு எம்மை தூண்டும் எனவும் அதனுள் சென்றவுடன் அது தன்னை இன்னொரு ஒளி இல்லாத நகரத்திற்கு அழைத்து சென்றது எனவும் அங்கு தன்னுடன் ஒலியுடன் ஒருவர் நின்றதாகவும் கூறியிருந்தார் . (from The vestuble by Jess E. Weiss )

இன்னொருவரின் கருத்துப்படி அது ஒரு சிறந்த அனுபவம் எனவும் தன்னை சுற்றி அனைத்தும்  வெள்ளையாக  இருந்ததாகவும் ஆனால் அதே நேரம் வெட்ட வெளியாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இவர் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் .
Tracy Lovell, after a drug overdose suicide attempt (in "The return from silence " by Scott D. Rogo)


இந்த பிரச்னையை விஞ்ஞான ரீதியாகவும் வேறு விதமாகவும் ஆராயலாம் . விஞ்ஞானத்தை தவிர்த்து பார்த்தால் உடலை விட்டு வெளியேறும் உயிர் எமது உலகத்துக்கும் மரணத்திற்கு பின்னரான இன்னொரு உலகத்துக்கும் இடையில் பயணிக்கிறது . இது மிக நீண்ட குகை போன்ற இடங்களினூடு பயணிக்கின்றது . சில வேளைகளில் ஒளியின் வேகத்தில் பயணிக்கலாம் .  

இது நேர இயந்திரத்துடன் அதாவது ஐன்ஸ்டினின் நேர பயணத்துடன் தொடர்பு பட்டுள்ளதா என யோசிக்க தோன்றுகிறது . மேலே கவனித்தீர்களானால் பச்சை எழுத்துக்களால்  அவர்கள் பார்த்த வெளிச்சமில்லாத உலகம் , குகை போன்ற அமைப்பினூடு பிரயாணம், பார்த்த இன்னொரு வெளிச்சமில்லாத நகரம்  போன்றவை இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு வேளை எமது வாழ்க்கை ஒரு தொடராக மீண்டும் பழைய காலத்துக்கோ அல்லது அதி நவீன காலத்துக்கோ நாம் செல்லலாம் . 

சிலருக்கு நித்திரையில் தியானத்தின் போதும் உடலை விட்டு மேலே செல்வது போல உணர்வுகள் தோன்றும் . உடலை விட்டு வெளியே செல்வது மரணத்தின் ஒரு அங்கமே .
மரணத்தை அண்மித்தால் விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம் . எனது அடுத்த பதிவில் விஞ்ஞான  அறிவியல் பார்வையில் இடுகிறேன் . 

தகவல் பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அனைவரையும்  சென்றடைய செய்யவும்... 

Tuesday, May 25, 2010

புதிய உலகின் உத்தரவு....அதென்ன ??

நாம் அனைவரும்  உள்ளூர் அரசியல் , உலக அரசியல் தான் இதுவரை அறிந்திருக்கிறோம். அதை வைத்து தான் உலக விடயங்கள் உற்றுநோக்கப்படுகின்றன . ஆனால்  அனைவரும் அறிந்திருக்காத உலக மர்மங்கள் இருக்க உலக  தலைவர்கள் , கண்ணிற்க்கு தெரியாத நாம் கேள்விப்படாத உலக தலைவர்கள் , உலக குழுக்கள் , மூளைச்சலவை செய்யப்படும் மனிதன் , அடங்கிய ஊடகங்கள் அனைத்தையும் பற்றி ஒரு தொடராக எழுத முடிவு செய்துள்ளேன்
.==================================================================================

உலகத்தின் மர்ம முடிச்சுகள் எவளவோ அவிழப்படாமல் இருக்கும் போது உலக நடப்புகள் , உலக அரசியல் , ஆட்சி ரகசியங்கள் என பல அவிழப்படாமல்  இருக்கின்றன . உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு கூட தெரியாத பல விடயங்கள் இந்த உலகில் நடக்கின்றன . அவர்கள் எல்லாம் நாட்டு தலைவர்களுக்கு கீழேயே தவிர நாட்டு தலைவர்கள் யாருக்கு கீழே என்பதை அறிந்திருக்கவில்லை . அரசியல் ஆய்வாளர்களும் அறிந்திருக்க மாட்டார்கள் .

நிலவில் முதல் அமெரிக்கன் காலடி எடுத்து வைத்ததில் இருந்து செப்டெம்பர் 11 தாக்குதல் வரை அனைத்தும்  மர்மம் .  எனது பழைய பதிவில் அமெரிக்காவின் ஒரு மர்ம இடம் ஏரியா 51 பற்றி பார்த்திருந்தேன் .

அது போன்ற ஒரு இடம் தான் அமெரிக்க கோலாரிடோவில் அமைந்துள்ள டென்வர் விமான நிலையம் .  டென்வேர்விமான நிலையம்   உலகின் மூன்றாவது மிகப்பெரிய விமான நிலையம் என இடம் பெற்றுள்ளது .

கட்டி முடிக்கப்பட்ட பிரதான விமான நிலையம் இருக்கும் போதே இன்னொரு விமான நிலையம் கட்டப்பட்டது . ஆனால் எந்த வித வசதிகளும் இல்லாது காணப்படும் புதிய விமான நிலையம் அதன் வடிவத்திலேயே கேள்வி எழுப்புகிறது . உலகயே ஆள முற்பட்ட  ஹிட்லரின் ஆட்சி குறியீட்டில்  அமைக்கப்பட்டுள்ளது அந்த நிலையம் .சுவஸ்திக குறியீடு  தான் அது .


அதி நவீன தொழில் நுட்பம் நிறைந்த விமான நிலையம் இருக்க இன்னொரு  விமான நிலையம் ஒன்றும் இல்லாமல்  கட்டப்பட்டது ஏன் ?.


கூடுதலாக உலகத்தலைவர்களின் பேச்சுகளில் நியூ வேர்ல்ட் ஆர்டர்(New world order ) எனும் விடயம் அடிபட்டிருக்கிறது .



புதிய உலகின் உத்தரவு ?? அப்படியென்றால் அது என்ன புதிய உலகம் , இது யாரால் வழி நடத்தப்படுகின்றது என்ற கேள்விகளுக்கு எந்த அரசிடம் இருந்தும் பதில் வரவில்லை .

ஆனால் இவர்கள் ஒரே நோக்கம் ஒன்றாக இணைந்த உலக அரசை கொண்டு வருவதே, அதாவது எந்த வித எல்லைகளும் அற்ற ஒன்றிணைந்த நாடு . ஆனால் இந்த விடயம் சாத்தியமாக பாரிய அழிவை ஏற்ட்ப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்களாக மக்கள் தொகையை குறைத்தால் மாத்திரமே இது சாத்தியம் . காரணம் அப்போது தான் ஆனைவரையும் ஒரே கட்டுப்பாட்டில் வைத்திருக்க  முடியும் . 

ஆனால் விமான நிலையம்  செல்பவர்களும் சரி இருப்பவர்களும் சரி அங்கு காணப்படும் அறியமுடியாத மர்ம குறியீடுகளால் குழம்பியுள்ளனர். முதலாவதாக அங்கிருக்கும் கல் வெட்டில் எழுதப்பட்டிருக்கும் விடயம். திகதிக்கு கீழே  பார்த்தால் நியு வேர்ல்ட் எயர்போர்ட் கமிஷன் (New world airport commision )என எழுதப்பட்டிருக்கும் .

இப்படியொரு அமைப்பு இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை . இப்படியொரு  அமைப்பு இதுவரை உலகில் உருவாக்கப்படவும் இல்லை!!!! .


சம்மந்தமே இல்லாமல்  நிலத்தில் காணப்படும் இந்த உருவங்கள் ஏன் என்பது புரியவில்லை .


AUAG என  குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் பொன் , வெள்ளி எனவும் எடுத்துக்கொள்ளலாம் . ஆனால் ஆஸ்திரேலியன் அண்டிஜென்(Australiyan Antigen - AUAG   ) எனும் வைரஸ் என்றும் அர்த்தப்படுத்தலாம்  . 

இதில் முக்கியமான அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால் இந்த நில உருவத்திட்க்கு நேர் மேலே சுவரில் உலக உயிர்கள் அழிப்பு பற்றிய படம் இருக்கும் . இந்த சுவரை சுற்றி காணப்படும் படங்கள் நம் உலகை பிரதிபலிப்பதாகவே இருக்கும் .


இந்த படம் மனிதன் முகத்தில் வாயு பாதுகாப்பு முகமூடி அணிந்து சமாதானத்தை(புறாவை ) கொல்வது போல படம் அமைந்திருக்கும் . சமாதனம் அற்றுப்போவதை அந்த படம் குறிக்கிறது .அதுவும் இந்த படம் வைரஸ் குறியீட்டுக்கு நேரே இருக்கிறது . பக்கத்தில் அனைவரும்  இறந்து கிடக்கின்றனர் . நச்சு வாயுத்தாக்குதல் பல உயிர்களை அழிக்கும் என்ற வகையில் பிரதிபலிக்கிறது  .

உயிரினங்கள் காப்ற்றப்படுவது போல காட்ச்சிகள் கீறப்பட்டுள்ளன .

அனைத்து நாட்டு குழைந்தைகளும் ஆயுதங்களை கொண்டு வந்து ஒரே இடத்தில் போடும் படியாக அடுத்த படம் அமைந்துள்ளது .அனைத்து உயிர் அழிவும் இடம்பெற்ற  பின்னர் ஆயுதங்கள் தேவைப்படாது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.

 .

அந்த முகமூடி மனிதன் இறந்து கிடக்க அதன் மீது புறா இருக்கிறது . இது பாரிய அழிவின் பின்னர் மீண்டும் சமாதனம் நிலவும் என்ற கருத்தை குறிக்கிறது .

அதன் பின்னர் அனைவரும்  மகிழ்ச்சியுடன்  ஒருவரின் பின்னால் ஒன்று சேருவது போல காட்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளது . ஜேசு கிறிஸ்து போல வடிவமைக்கப்பட்டுள்ளது .


இவை அனித்தும் இடம் பெறும் என்ற மனப்பாங்கில் மறைமுகமாக குறிக்கப்பட்டுள்ளன என்று கூறலாம் .அமெரிக்காவுக்கு  முதல் கனடா , கொலம்பிய ,அமேரிக்கா என மூன்றையும் இணைத்து எல்லையில்லாத நாடொன்றை உருவாக்கும் திட்டம் இருந்தது .

இந்த ஒரு உலக கோட்பாடு மேலும் பல முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . ஆனால் இதற்க்கும் மாயநிட்கும்  என்ன சம்மந்தம் .


 ஒரு பெண் மாயன் டப்ளேட்(நாகரிக  வளர்ச்சி பற்றி குறிப்பீடு ) கொண்டு வந்து தருவது போல ஒரு குறியீடும் காணபடுகிறது . உலக அரங்கில் இந்த சம்பவம் 2012 இல் நடந்தேறுமா ? புதிய உலக உத்தரவை பிறப்பித்து அனைத்து  தலைவர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குழு எது ?2012 உலக அழிவு எனும் புரளியை கிளப்பி விட்டு இவர்களே   அதை அர்ங்கேற்றுவார்களா ?

கட்டப்படும் புதிய விமான நிலையத்துக்கு கீழே இருப்பது என்ன ? அதன் காரணம் என்ன ?  

தொடருவேன் ... 
பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும் ..

3 இடியட்ஸ் உம் இலங்கை இந்தியக்கல்வி முறையும்...

மாணவர்களின்  அறிவுப்பாதை மற்றும் எதிர்காலத்தை திறக்கும் ஒரு கூடமாக பாடசாலையானாலும் சரி, சுற்றுப்புற சூழல் , வறுமை , குடும்பம் மற்றும் உயர்கல்வி கற்கும் கூடமாக இருந்தாலும் சரி அனைத்தும்  மிக முக்கிய பங்கு  வகிக்கின்றன .இதில் முக்கியமானது மன அழுத்தம். இந்த மன அழுத்தம் சுற்றுப்புற சூழல்களால் ஏற்ப்படலாம் ஆனால் கல்வியாலேயே ஏற்ப்பட்டால்!! அதே நிலை தான் பெரும்பாலும்  ஆசிய நாடுகளை ஆட்டிப்படைக்கின்றன .

3 இடியட்ஸ் படம் மாபெரும் வெற்றி பெற்று அனைவரையும் சென்றடைந்தது உண்மை . ஆனால் அந்த திரைப்படம் சரியாக சென்றடைந்ததா என்றால் நிச்சயம் இல்லை என்றே   சொல்லலாம் .

அந்த திரைப்படம் சொல்ல வரும் விடயம் கல்வி முறை மாற்றமும் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கும் கட்டாய கல்வி முறை பற்றியுமே. ஆனால் அதன் பிரதான கரு இதுவாக இருந்தாலும் சில மாற்றுக்கருத்தாளர்கள் 3 இடியட்ஸ் திரைப்படம் ஒரே பாதையிலேயே பயணிக்கிறது என்ற வாதத்தை வைக்கின்றனர். அதில் வரும் விடயங்கள் தவறென்பது அவர்கள் கருத்து .


அதுவும் இதற்க்கு மிக முக்கிய எதிர்ப்பை தெரிவிப்பது பெரிய பதவியில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகளே .  அந்த திரைப்படத்தில் வரும் விடயங்கள் அனைத்தும்  தவறு என்பதுடன் இந்த கருத்து மாணவர்களை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லுமாம் . ஒரு வேளை தாம் அனைவரும் கல்வி எனும்படியை முடித்து விட்டதால் இப்படி எண்ண தோன்றுகிறதோ  தெரியவில்லை .

ஆனால் மாணவர்கள் பார்வையில் அவர்களின் கருத்தை பார்த்தால் , பாடங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை மீட்டுவனவாகவும் முக்கியமாக தாம் என்ன படிக்கிறோம் எதற்க்காக படிக்கிறோம் என்பதை உணராமல் கேள்வி கேட்க்காமல் படிக்க வேண்டி  உள்ளதாக கூறுகின்றனர் .அதுவும் முக்கியமாக ஒரு பாடத்தில் விசேட சித்தி பெற வேண்டுமானால் அது மனப்பாடமாக்குபவனாலும் தூங்காமல்  இரவு முழுக்க கண் முழித்து வருத்தி படித்தால் மட்டுமே பெற முடியும் என்ற இன்னொரு கருத்தும்   நிலவுகிறது . கூடுதலாக பாடங்களை விளங்கி  கற்கும் மாணவர்களிடையே புள்ளிகள் குறைவாகவும் , மனப்பாடமாக்குபவர்களுக்கு புள்ளிகள் கூடுதலாகவும் பெறுபேறுகளில் கிடைப்பது உண்மையே .

  இதற்க்கு  கல்வித்துறை அதிகாரி நாராயணன்  கூறிய பதில் முக்கியமாக தாம் அனைவரும் இந்திய  கல்வித்திட்டத்தில் இருந்தே பயனை பெற்றதாகவும் அதை எதற்கு ஏளனம் செய்து திரைப்படத்தை அமைத்ததாகவும் குற்றம் சாட்டினார் .

ஆனால் இந்த திரைப்படம் கல்வியை குறை கூற முன் வரவில்லை . திரைப்படம் முழுக்க முழுக்க குறை கூறுவது கல்வி முறையையே .  கல்வி சரியாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் , மாணவர்களை  சென்றடைய வைக்கும் முறையிலேயே அடிப்படை தவறுகள் இடம் பெறுகின்றன .

தாய் தந்தையர் கட்டாயப்படுத்தி இந்த துறையில் தான் நீ செல்லவேண்டும் என வற்புறுத்தும் விடயமாக இருந்தாலும் சரி , மாணவர்கள் புள்ளிகளுக்காகவும் டிகிரி  எடுப்பதர்க்காக்கவுமே தமது உயர் கல்வியை தொடர்கின்றனர் என மாணவர்கள் சிந்தனையையும் வெளிப்படுத்தி இருப்பதிலும் சரி , ஏட்டு கல்வி முறையானாலும் சரி அனைத்தையும் கொண்டுள்ள படம் தான் 3 இடியட்ஸ் .

வெளிநாடுகளில் கூடுதல் கண்டு பிடிப்புகளும் தொழில் வளர்ச்சியும் இவளவு தூரம் வளர்ச்சி அடைய காரணம் அவர்கள் தாம் தமது கல்வியை டிகிரிக்காக அல்லாது விரும்பி படிப்பதுவே . இது அவர்களை மேலும் அந்த துறையில் வளர செய்யும் என்பது உறுதி . ஆனால் நமது கல்வித்திட்டம் புள்ளிகளை வைத்து தீர்மானிக்கப்பட்டு விடுவதால் ஒவ்வொரு துறையிலும் செல்பவர்கள் கூடுதலாக அலுவலகங்களில்(அரசாங்க ) உறங்குகின்றனர் . காரணம் அவர்கள் கற்கும் போது நிச்சயமாக அரசாங்க துறையில் வேலை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே  அவர்களை சூழ்ந்திருக்கும். தாம் அந்த துறையை விரும்புகிறோமா  இல்லையா என்பது அவர்கள்  எண்ணத்தில் எழாது .

அத்திரைப்படத்தில் முக்கியமாக வரும் ஒரு காட்சி மாணவர்கள் நிலை பற்றிய முழு விளக்கத்தையும் கல்வித்திட்டம் பற்றியும் தெளிவாக்கும் . மெஷின் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று  அமீர் கானிடம்  கேள்வி கேட்கப்படும். உடனே அமீர் கான் எளிய முறையில்  வேலையை இலகுவாக்க பயன்படுத்தப்படுவதே என கூறுவார். அதை தவறென்று கூறி இன்னொருவனிடம் கேள்வி கேட்க்க அதற்க்கு புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையை மனப்பாடமாக்கி வாசித்து காட்டுவார் மற்றையவர் . வெளியேற்றப்பட்ட அமீர் கான் உள்ளே வந்து  விட்டு விட்டு சென்ற புத்தகம் எனும் ஒரு வார்த்தைக்கு ஒரு பக்க விளக்கம் சொல்லுவார் .

உண்மையில் இந்த ஒரு சிறிய காட்சி முழுவதையும் உள்ளடக்கி இருக்கும் என நினைக்கிறேன் .

முக்கியமாக செயன்முறைக்கல்வி முறை முன்னைய காலத்தில் இருந்திருக்கவே இல்லை . காரணம் வசதியின்மை . ஆனால் 1960 1970  களில் வந்த அதே பாடத்திட்டத்தை மீண்டும் திணித்து வைத்திருக்கின்றனர். சில பாடங்கள் தேவையில்லை என ஓரங்கட்டப்பட்டவை.

கல்வி ஆய்வாளர் ஒருவர் தெருவித்திருக்கும் கருத்து முக்கியமாக கல்வித்துறையில் தவறில்லை , கற்பிக்கும் பாடங்களிலும் தவறில்லை ஆனால் நம்பர்கள் தான் மேலும் அழுத்தத்தை  பிரயோகிகின்றனவாம். சில குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்களை உள்ளே எடுக்க முடியும் என்பதால் எண்ணிக்கைகளை குறைக்கவே புள்ளிகள் முறை தெரிந்தேடுக்கப்படுகிறதாம் . ஆனால் புள்ளிகளை மட்டும் வைத்தே தீர்மானிக்கலாமா என்பதே முக்கிய கேள்வி ?

ஒரு மனிதனின் வாழ்க்கையை புள்ளிகள் தீர்மானிப்பதில்லை . அவனின் சொந்த முயற்சி  சொந்த முடிவுகள் எண்ணங்கள் அவனை பல படிகள் முன்னேற்றும். ஒருவனின் சுய யோசனையை ஒரு ஏட்டு கல்வியால் தூண்டி விட முடியாது . எத்தனையோ படித்தவர்கள் கூட வாழ்க்கையில் கூட முடிவெடுக்க  தெரியாமல் தவிப்பது யதார்த்தம். தேடல் என்பதே ஒரு மனிதனை மிகவும் முன்னேற்றும் ஒரு காரணி. தேடல்நிச்ச்சயம் கற்றவனை விட ஒரு படி உயர்த்தி வைக்கும் .



ஆனால் சிலருடைய கருத்து என்னவென்றால் கல்வி முறையை திடீரென வெறுத்து மாற்றம் கொண்டு வர முடியாது என்பதே . ஆனால் படிப்படியாக கொண்டு வரலாம் என்கின்றனர் .

எப்படியிருந்தாலும் உழைப்பதற்காகவே படிக்கிறோம் என்ற எண்ணம் ஊறி  விட்டதை யாரும் மறுக்க முடியாது . பிடித்திருக்கிறது படிக்கிறேன் எனும் வார்த்தை குறைவாக கேட்பதே உண்மை . அது தான் மருத்துவத்திலானாலும் சரி எந்த துறையிலானாலும் சரி லஞ்சமும் ஊழலும் தலை விரித்தாடுகிறது . விரும்பி படித்தவனுக்கு போய் சேவை செய் என அரசு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை . நகரத்தில் இருந்தால் உழைக்கலாம் வசதியாக இருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன ஓடும் செயவைத்துரை கல்வியைதேர்ந்து எடுத்தவர்கள் மனதில் .

வெளிநாட்டில்(சில நாடுகளில் ) கல்வி கற்பிப்பதற்கு நிச்சயம் ஆசிரியரோ பேராசியரோ மனோதத்துவம் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது . இங்கு அதிகாரிகளாக இருக்கும் எத்தனை அதிகாரிகள் மனோதத்துவம் படித்துள்ளனர் என்றால் இல்லை என்றே சொல்லலாம் . 

அனைவர் மீதும் குற்றம் அடுக்குவதில் பலன் இல்லை . ஆனால் நாம் எம்மை மாற்றலாம், அரசையே  மாற்றலாம்  . கல்விச்சேவை தான் நடக்கிறதே தவிர கல்வியை எப்படி இன்னும் மேம்ம்படுத்தலாம் என்பதற்கு எந்த குழுவும் இயங்குவதாக தெரியவில்லை ..

பிடித்திருந்தால் மறக்காம ஓட்டை போட்டிருங்க ...

Monday, May 24, 2010

விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..?

உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .


அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை .


இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் .



இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.


எவளவு பெரிய விபத்தானாலும் ஒரு விமானம் முழுமையாக தீப்பிடித்து வெடித்து எரிவதற்கு 90 செக்கன்கள் ( 1 1/2 நிமிடங்கள் ) ஆகும். இது சர்வதேச தீ விபத்து பாதுகாப்பு மையத்தின் ஆய்வு அறிக்கை கூறும் தகவல் . அந்த 90 செக்கன்களையும் நாம் பயனுள்ள விதத்தில் பாவிப்பதிலேயே உயிர் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு .


நடை பெற்ற விபத்தில் இருந்து பிழைத்த உமர் பாரூக் கூறிய கருத்தின் படி பார்த்தால் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் . சில உயிர்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஏன் மற்றயவர்களால் எழுந்து வரமுடியவில்லை ??


"திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம்.சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது."தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது."


I got caught in some cables but managed to scramble out

தான் இடையில் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார் உமர் . விமானம் எரிந்து தீப்பற்ற முதலே சிலரது உயிர்கள் பதற்றத்தால் செல்லும் வாய்ப்பு அதிகம் . மற்றும் பொருள்கள் ஏதாவது எதிர்பாராத விதமாக அடிபடும் . முக்கியமாக தலைப்பகுதியே முதலில் தாக்கப்படும் .




தலைப்பகுதி அடிபடுவதால் சிலர் முதலே மயக்கமடைவர் . தலைப்பகுதியை முன்னாள் இருக்கும் இருக்கையில் வைத்து படுக்க வேண்டும் . இதனால் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து பிழைக்கலாம் .


என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.


பலரால் எழுந்து ஓடி வந்திருக்க முடியும் ஆனால் நெருப்பு எரிந்ததால் வந்த புகை அவர்கள் மயக்கத்திற்கு காரணம் . வரும் நெருப்பு புகை மேலாக தான் கூடுதலாக செல்லும். குறைவாக சுவாசிப்பதன் மூலமும் கீழே குனிந்து கொண்டு வெளியேறுவதன் மூலமும் அந்த மயக்கத்தை தவிர்க்கலாம் .இல்லாவிட்டால் ஈரமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளவும்



இந்த செயன்முறை உயிர் பிழைக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் .


"நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது." ஏன் அவரால் விரைவாக வெளியேறும் பகுதியை திறக்கம் முடியவில்லை? அவர் இருந்த இருக்கைக்கு அருகாமையில் தான் வெளியேறும் பகுதி இருக்கிறது . தான் விமானத்தின் பின் பகுதியில் இருந்ததாக கூறினார் .



அனைவரும் கட்டாயமாக விரைவாக வெளியேறும் பகுதி திறக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். சில வேளைகளில் விமானம் எரியும் போது அதில் பணி புரிபவர்கள் கூட இறந்திருக்கலாம் . ஆகவே எமக்கு அதை திறக்க தெரிந்திருக்க வேண்டும் . இதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் .

நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் நமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்கின்றன .



கூடுதலாக விரைவாக வெளியேறும் கதவுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் மற்றும் விமானத்தில் பின்னால் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வீதம் 60 % ஆம்..


முக்கியமான தவறுகள்


விரைவான அதிர்ச்சி

அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தான் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்குவர் . கண்களை மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள் . அடுத்த படியை யோசிப்பதில்லை . இது தான் உண்மை .


பொதிகளை கை விடாமல் இருத்தல்


முக்கியமாக எம்மவர்கள் பொதிகள் மீது கவனம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுவர். பொதிகளை விட்டு விட்டு உடனடியாக வெளியேற மட்டுமே பார்க்க வேண்டும் . எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது கூற முடியாது . ஆனால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்பது நிச்சயம் .

தயவு செய்து விமான பயணத்தில் குடிக்காதீர்கள் . அது உங்கள் செயல்ப்படும் திறனை இன்னும் குறைக்கும் .


விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கும் போது அலட்ச்சியம்


அனைத்திற்கும் காரணம் அலச்சியம். கூடுதலாக நாம் ஒருவரும் விமானம் புறப்படும் முன் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை . காரணம் எத்தனையோ தடவை கேட்டு விட்டோம் என்ற அலட்ச்சியம் . ஆனால் சில தகவல்கள் விமானத்துக்கு விமானம் வேறு படும் எனபதே உண்மை .



பாதுகாப்பு உறையை கூடுதலாக உடனே அணிய வேண்டும் ஆனால் விமானம் விழுந்தது நீர் பரப்பாக இருந்தால் விமானத்தை விட்டு உடனே குதிக்க தேவையில்லை .


இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்பது சிலருடைய கருத்து . சிலருடைய கருத்து அந்த நேரம் என்ன செய்வதென்றே தெரியாது என்பதே . நாம் அதிர்ச்சியடைவதன் மூலம் உயிர் காப்பாற்றப்படப்போவதில்லை .உயிர் பிழைக்கும் விகிதம் மனதளவில் குறைக்கப்படும் . ஆனால் மன அழுத்தத்தை எதிர் கொண்டு விரைவாக செயல்ப்பட வேண்டும் . சில திடீர் வெடிப்புகள் தவிர்க்க முடியாது .


video


இவற்றால் உயிர் பிழைக்கலாம் என்றில்லை . உயிர் பிழைக்கும் விகிதத்தை கூட்டலாம்.


இந்த தகவல் பிரயோசனமாக இருந்தால் அனைவரையும் சென்றடைய ஓட்டை கிளிக் செய்யவும் .

ஏன் ?