விமர்சனம் , சுதந்திரமான கருத்து,மாற்றுக்கருத்து என்ற போர்வையில் இந்த மட்டம் தட்டுதல் எனும் விடயம் முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள சில மனிதர்களின் உண்மை முகங்களுள் ஒன்று . நவீன முறைகளையோ அல்லது அறிவியல் முறைகளையோ புகுத்த நினைக்கும் போது பழமை வாதிகளால் அல்லது மேலோட்ட சிந்தனைகளால் , பொறாமை , இயலாமை போன்ற குணங்கள் அடுத்தவற்றையோ,தனிமனித சிந்தனைகளையோ அல்லது படைப்புகளையோ மட்டம் தட்ட நினைப்பது யதார்த்தம் .
அனைவரும் மனிதர்களே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை . மனிதனை மனித சிந்தனைகள் உயர்த்தும் என்ற எண்ணக்கரு ஒவ்வொரு மனிதனின் ஆள் மனதிலும் விதைக்கப்படவேண்டும் . இது இப்போது நிகழ்வது மட்டுமல்ல ..இது வரலாறு ரீதியாக பல இடங்களில் பதியப்பட்ட ஒன்று . ஒரு சிறு கதை விளக்கும் என்று எண்ணுகிறேன் .
கொலம்பஸ் தான் கடல் வழிப்பயணம் மேற்க்கொண்டு அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்றவுடன் எம் மனதில் அடிப்படையில் தோன்றும் ஒரே எண்ணம் இது அனைவராலுமே முடியுமே .ஏன் ஒரு மீனவனாலும் முடியுமே ? இதில் என்ன சிறப்பு இருக்க போகிறது என்பதே ..
ஆனால் இதற்க்கு அவர் 18 வருடங்கள்
திட்டமிட்டு கடினமாக உழைத்தார் . படகு ஓட்டிகளிடமும் ராணியிடமும் நீண்ட வாதம் புரிந்தே அவர் இறுதியில் செல்வதற்கு படகும் பெற்றார் . எப்படியும் கடல் வழியாக செல்லும் போது நான் தரையை அடைவேன் , நிச்சயம் தரை இருக்கும் என நம்பினார் . அனைவரும் நகைத்தனர் . முட்டாள் கனவு என திட்டினர் ,முடியாத காரியம் என மட்டம் தட்டினர் . அனைத்திற்கும் தளராமல் தொடர்ந்தார் .
இறுதியில் அமெரிக்க தரையை அடைந்ததும் இதுவரை ஐரோப்பியர் எவரும் இதனை அடையவில்லை என்பதை உணர்ந்து ஆனந்தப்பட்டார் . அது அவர் முகத்தில் ஒரு பைத்தியக்காரன் சிரிப்பு போல . காரணம் ஒருவர் கூட அதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை .
அவர் இந்த செய்தியுடன் மீண்டும் ஐரோப்பா வந்தவுடன் ராணி , ராஜாவிடம் இருந்து வாழ்த்தும் வரவேற்ப்பும் கிடைத்தது . ஆனால் சிலருக்கு இதை பொறுக்க முடியவில்லை .
இதில் என்ன இருக்கிறது இது ஒரு சாதாரண மீனவனாலும் முடியும் என்று ஏளனமாக நகைத்தனர் .
பொறுத்துக்கொண்டார் கொலம்பஸ்... அன்றிரவு ஸ்பானிஷ் ஒருவர் கொலம்பஸை கௌரவிக்க இரவு விருந்து கொடுத்தார் . அங்கு வந்திருந்த சிலர் கொலம்பஸை மட்டம் தட்ட நினைத்தனர் .. யாராலும் இது முடியும் , ஒரு படகு எடுத்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றனர் . பதில் அளிக்காத கொலம்பஸ் சிறிது நேர மௌனத்தின் பின் ....
சட்டியில் இருந்த முட்டையை எடுத்து அனைவரிடமும்
" ஜென்டில்மேன் யாரால் இதை முனைப்பக்கதில் நிலைக்குத்தாக நிறுத்த முடியும் "என்றாராம். அனைவரும் முயற்சி செய்தும் முடியவில்லை , முட்டை சரிந்து உருண்டது . பின்னர் அவர்களே இது எப்படி முடியும் என்றனர் .
முட்டையை எடுத்து அதன் கூர் முனையை சிறிதாக உராய்த்து உடைத்து நிறுத்திக்காட்டினார் .
"ஜென்டில்மன் இது உலகில் மிகவும் இலகுவான செயன் முறை இது . எதை நீங்கள் முடியாது என்று கூறினீர்களோ அதே விடயம் " அனைவராலும் செய்யமுடியும் ..அது எப்படி செய்வது என்று காட்டிய பின்பு ..
முக்கியகுறிப்பு :- கொலம்பஸ் கடல் பயணம் செல்லும் போது உலகம் உருண்டை என அறிந்திருக்கவில்லை . தட்டை என்றே நினைத்திருந்தனர் . ஆனால் அவர் அதை பற்றி அதன் முடிவை பற்றி கவலைப்படவே இல்லை ..
பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லியில் வாக்கை பதியுங்கள் .