Thursday, January 27, 2011

உங்களுக்கு தெரியுமா ? -பிரபலமானவர்கள் பற்றி சுவாரசியமான சில

படித்தவை தெரிந்தவை சிலதை உங்களோடு பகிர்கிறேன் ...

எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் வடக்கே தலை வைத்து தான் உறங்கினார் .அது தனது எழுத்து திறனை அதிகமாக்கும் என நம்பினார் .


ஜூலியஸ் சீசர் தனது தலையில் இலையால் அமைந்த வளையத்தை அணிந்த காரணம் தனது தலை முன்னால்  விழுந்திருந்த வழுக்கையை மறைக்கவாம் ...


 எதிர்காலத்தில் 13 ஆவது போப் ஜோன்  ஆக இருந்தவர் முதலாம் உலகப்போரில் இத்தாலிய ராணுவத்தில் சார்ஜென்ட் ஆக இருந்தவராம்.

ஆல்பர்ட் ஐங்ஸ்டெயின் இறந்த போது அவரது இறுதி வார்த்தைகளும் இறந்து போனது .அவர் அருகில் இருந்த தாதிக்கு (நேர்ஸ்) ஜெர்மானிய  மொழி தெரியாது .

முதலாம் எலிசபெத் மகாராணியின் காலத்தில் ஆண்களின் தாடிகளுக்கு வரி செலுத்தும் முறை இருந்தது .

மேரி கியூரி ரேடியத்தை கண்டு பிடித்ததற்கு இரு தடவைகள் நோபெல் பரிசு பெற்றார் . பிரெஞ்சு அகடமியில் அங்கத்தவராக இடமளிக்கப்படவில்லை .காரணம் அவர் ஒரு பெண் என்பதால் .


 உலகபுகழ்  பெற்ற இசை மாமேதை மொசார்ட் பாடசாலைக்கே போனதில்லை .

1944 ஆம் ஆண்டு பிடேல் காஸ்ட்ரோ கியூபா பாடசாலை சிறந்த விளையாட்டு வீரர் என தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இத்தாலியின் தேசிய கொடி நெப்போலியனால் வரையப்பட்டது .

ஒரு முறை லேடி அச்ட்டர்  வின்ஸ்டன் சர்ச்சில் இடம் நான் உங்கள் மனைவியாக இருந்தால் கோப்பியை நஞ்சு ஆக்குவேன்  என்றாராம் ..

அதற்க்கு வின்ஸ்டன் சர்ச்சிலின் பதில் " நீ என் மனைவியாக இருந்தால் நான் அதை குடிப்பேன் " என்றாராம் ....

 

4 comments:

Philosophy Prabhakaran said...

ஜூலியஸ் சீசர், சர்ச்சில் மேட்டர் செம சுவாரஸ்யம்... கிளியோபாட்ரா காலம் பற்றி சொன்னீர்கள்... கிளியோபாட்ரா பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லையா...

S.Sudharshan said...

நன்றி .. கிளியோபட்ரா பற்றி பல மர்மங்கள் உண்டு ..எழுத முயற்ச்சிக்கிறேன் .. நன்றி ... :-)

உருத்திரா said...

பயனுள்ள தகவல்கள்

Jana said...

உபயோகமான தேவையான பதிவு. நன்றிகள்.