தொடருபவர்கள் - நன்றிகள்

Friday, January 28, 2011

ஏன் குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது? மேலும் சுவாரசியமான சில

வேகமான  கார்கள்(பெராரி enzo போல ) 8 .1 மீட்டர் வரை வேகத்தை ஆர்முடுக்கும் . அதாவது ௦ இலிருந்து 60 mph வரை தனது வேகத்தை 3 .3 செக்கனில்  கொண்டு  வரும் ..ஆனால் சிறுத்தை இந்த காரை விட வேகம் . 3 அடிகள் வைத்தவுடனனேயே 40 mph வேகத்தை பெற்றுவிடும் .

இந்த சீதா ஓடுவதற்கே பிறந்த மிருகம் போல உடல் வடிவமைப்பு . சீதாவின் மெலிந்த கால்கள் சிறிய தலை ,மிருதுவான உடல்ப்பகுதி அனைத்தும் காற்றால் ஏற்ப்படும் தடையை குறைக்கிறது .அதன் சராசரி எடை 57 கிலோ கிராம்கள். அதனால் தூக்கி ஓடுவதற்கு அதிக எடையும் இல்லை .

அதன் பலமான இதயத்திநூடு கூடுதலான இரத்தம் பம்பப்படுகிறது .பெரிய நுரையீரல் மற்றும் மூக்குத்துவாரம் கூடுதலான காற்றை உள்ளெடுத்து வெளிவிட உதவுகிறது .அதன் இதயத்துடிப்பும் வேகத்திற்கு ஏற்ப்ப அதிகரிக்கிறது .


புதிதாக குழந்தை பிறந்தவுடன் அது அழுகிறது . பெற்றோர் சந்தோசத்தில்  இருந்தாலும் அந்த குழந்தை அழுவதற்கு உயிரியல் காரணம் இருக்கிறது .

தாயின் கருப்பையினுள் இருந்த குழந்தை முதன் முதலாக வெளி உலகிற்க்கு  வரும் போது முதலாவது தப்பி பிழைக்கும் செயலை தொடங்குகிறது . அது அழுகையுடன் தொடங்குகிறது .

அது உயிர் வாழ அவசியமான இந்த கத்தலுடன் கூடிய அழுகை மூலம் இதுவரை பலூன் போல செயல்ப்படாது இருந்த அதன் நுரையீரல் முதன் முதல் காற்றை சுவாசிக்கிறது .

சுவாரசியமான சில ...



நீங்க வலதுகை பழக்கம் உள்ளவராக இருந்தால் வாயின் வலது பக்கத்தால் உணவை அரைப்பீர்கள் . இடது பக்கமாக இருந்தால் இடதுபக்கமாக ..

பசி எடுப்பது நின்றால் அதிகமாக நீரை அருந்துங்கள் . உடல் நீரை இழந்தால் பசியெடுக்கும் பொறிமுறை செயலற்று போகும் 

வெங்காயம் உரிக்கும் போது சூவிங்கம் போட்டால் கண்ணீர் வருவதை தடுக்கலாம் .

சங்கை காதுக்குள் வைக்கும் போது எமக்கு கேக்கும் சத்தம் காத்து நரம்புகளிநூடு மேலும் கீழும் பாயும் இரத்தத்தின் சத்தம் .

டயிடணிக்  கப்பல் செய்ய ஏழு மில்லியன்கள் செலவு .படம் எடுக்க 200 மில்லியன்கள் செலவு 

முயல்  ,கிளியால்  மட்டுமே  தலையை  திருப்பாமல்  தமது  முதுகுப்பக்கத்தை பார்க்க முடியும் . 



Thursday, January 27, 2011

உங்களுக்கு தெரியுமா ? -பிரபலமானவர்கள் பற்றி சுவாரசியமான சில

படித்தவை தெரிந்தவை சிலதை உங்களோடு பகிர்கிறேன் ...

எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் வடக்கே தலை வைத்து தான் உறங்கினார் .அது தனது எழுத்து திறனை அதிகமாக்கும் என நம்பினார் .


ஜூலியஸ் சீசர் தனது தலையில் இலையால் அமைந்த வளையத்தை அணிந்த காரணம் தனது தலை முன்னால்  விழுந்திருந்த வழுக்கையை மறைக்கவாம் ...


 எதிர்காலத்தில் 13 ஆவது போப் ஜோன்  ஆக இருந்தவர் முதலாம் உலகப்போரில் இத்தாலிய ராணுவத்தில் சார்ஜென்ட் ஆக இருந்தவராம்.

ஆல்பர்ட் ஐங்ஸ்டெயின் இறந்த போது அவரது இறுதி வார்த்தைகளும் இறந்து போனது .அவர் அருகில் இருந்த தாதிக்கு (நேர்ஸ்) ஜெர்மானிய  மொழி தெரியாது .

முதலாம் எலிசபெத் மகாராணியின் காலத்தில் ஆண்களின் தாடிகளுக்கு வரி செலுத்தும் முறை இருந்தது .

மேரி கியூரி ரேடியத்தை கண்டு பிடித்ததற்கு இரு தடவைகள் நோபெல் பரிசு பெற்றார் . பிரெஞ்சு அகடமியில் அங்கத்தவராக இடமளிக்கப்படவில்லை .காரணம் அவர் ஒரு பெண் என்பதால் .


 உலகபுகழ்  பெற்ற இசை மாமேதை மொசார்ட் பாடசாலைக்கே போனதில்லை .

1944 ஆம் ஆண்டு பிடேல் காஸ்ட்ரோ கியூபா பாடசாலை சிறந்த விளையாட்டு வீரர் என தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இத்தாலியின் தேசிய கொடி நெப்போலியனால் வரையப்பட்டது .

ஒரு முறை லேடி அச்ட்டர்  வின்ஸ்டன் சர்ச்சில் இடம் நான் உங்கள் மனைவியாக இருந்தால் கோப்பியை நஞ்சு ஆக்குவேன்  என்றாராம் ..

அதற்க்கு வின்ஸ்டன் சர்ச்சிலின் பதில் " நீ என் மனைவியாக இருந்தால் நான் அதை குடிப்பேன் " என்றாராம் ....

 

Monday, January 24, 2011

லூசிட் கனவுகள்(Lucid dreaming) - கனவில் கனவு

நீங்க யாரும் நிச்சயம் கனவு காணாம இருந்திருக்க மாட்டீர்கள்  . ஆனால்  அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை எனலாம் . தேஜாவு போல . அதாவது சில நேரங்களில் சில இடங்கள் நிகழ்வுகள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .ஆனால் இவை இரண்டும் அடிக்கடி அனைவருக்கும் நடப்பது . இதுவரை விடை காணாத புதிராய் இருப்பது கனவுகள் தான் . மருத்துவம் ,அறிவியல்,மனோதத்துவம்  என பல பக்கங்களில் இருந்தும் விளக்கங்கள் குவிகிறது .

இந்த வகையில் சில கனவுகள் நாம் காணும் போது அவை கனவு தான் என தெரியும் . ஆனால் சில கனவுகள் காணும் போது நிஜமாக நடப்பது போலவே இருக்கும்  . அந்த வகை கனவுகள் எளிதில் மறக்க முடியாதது . உங்களால் அனைத்தையும் உணர்ந்து விளக்கமாக பார்க்க முடியும் .

அது தான்  லூசிட் கனவுகள் . லூசிட் கனவுகளை நீங்கள் உணர்ந்து கனவு தான் காண்கிறீர்கள் என உணர்ந்து அனுபவிக்க முடியும் . இன்செப்ஷன் படம் பார்த்தவர்களுக்கு கிட்டத்தட்ட அதே போல இருப்பது போல தோன்றும் .

லூசிட் கனவுகளை எமக்கு ஏற்றது போல அமைத்துக்கொள்ளலாம் .விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் .இதன் முக்கியத்துவத்திட்க்காக ஒரு உதாரணம் சொல்கிறேன்.



 இந்த லூசிட் கனவுகள் பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது என்பது உண்மை . நீல் போர் கண்ட கனவு அவருக்கு நோபெல் பரிசை பெற்றுக்கொடுத்தது .எமது கோள்கள் சூரியனை சுற்றுவது  போல அணுவை சுற்றி இலத்திரன்கள் காணப்படுவதை கனவிலேயே அவர் கண்டார் .

இந்த கனவு REM உறக்க நிலையிலேயே வரும் . அதாவது உறக்கத்தின் 5 நிலைகளில் 5 ஆவது நிலையில் .

இந்த லூசிட் கனவுகளின் பின்னணியை  அலசினால் கொஞ்சம் தெளிவு பிறக்கும் . இது புராதன காலம் தொட்டே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இனத்தவர்கள் பலரிடமும் நிலவிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்தது . அமெரிக்க பழங்குடிகள் இந்த கனவுகளை அவர்கள் இறைவனை அடைய  ,தேவதைகள் ,ஆவிகளின் உலகத்துடனான வாசல் போல நினைத்திருந்தனர் .

Aborigines எனப்படும் அவுஸ்திரேலிய மூத்த பழங்குடிகள் உலகின் தோற்றத்தை ஒரு கனவாக தமது குறிப்புகள் ,கதைகளில் குறிப்புட்டுள்ளனர் . சிலர் தாம் காணும் கனவை குறியீடுகளாக வரைந்து வைத்துள்ளனர் .




இதிலிருந்து லூசிட் கனவுகள் புதியவை இல்லை என்பது தெரிகிறது ..அரிஸ்டாடில் இந்த கனவுகள் பற்றி எழுதியிருக்கிறார் ஆனால் சரியான பதம் இல்லை  . 

ஆனால் திபெத்திய புத்தர்கள் பலர் இந்த லூசிட் கனவுகள் போல சிலவை  பற்றி நீண்டகாலம் பயிற்சி,ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அது dream yogaa (யோகா ) .

உங்கள் நிலையை உணர்த்தி எப்போதும் விழிப்புடன் இருக்க மிகவும் உதவும் டிரீம் யோகா . எப்போதும் புத்த சமயத்தில் உள்ள நம்பிக்கை நிஜத்தை உணர்தல் .மாயையில் இருந்து விலகி இருத்தல் . லூசிட் கனவு காண்பவரால் அது கனவு உலகம் என அறிய முடியும் . கனவு காணும் போது அவர்களுக்கு  விருப்பமானது போல கனவை ,நிகழ்வுகளை  செலுத்தலாம் .

டச்சு மனோதத்துவவியலாளர்   Frederik van Eeden என்பவரே அதற்க்கான விளக்கங்களுடன் வந்தார் . சாதாரண கனவுகள் தொட்டு கனவில் 9 வகைகள் இருப்பதை கூறினார் .அவர் தனது லூசிட் கனவுகள் பற்றியும் குறித்துள்ளார் .ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பாலியல் உறவு சம்மந்தப்பட்ட கனவுகளே கூடுதலாக வந்துள்ளது . 

ஆனால் இது பிரசித்தி பெற்றது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மனோதத்துவவியலாளர்  Stephen Laberge
என்பவராலே .இவர் தான் கனவுகளை நாம் எமது படைப்புகள் ,கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என கூறியவர் .

ஏன் ?